5 வயதில் வலது கையை இழந்தவர் ஐஏஎஸ் தேர்வில் சாதனை!

 
அகிலா

சமீபத்தில் சிவில் சர்வீஸ் தேர்வு முடிவுகள் வெளியாகின. இதில் முதல் 4 இடங்களை பெண்களே பிடித்துள்ளனர். தமிழகத்தில் எலக்ட்ரீசியனாக பணிபுரிபவரின் மகள் முதலிடத்தை பிடித்தது பெரும் வரவேற்பை பெற்றது.  இதில் கேரளாவில் வசித்து வரும் தம்பதி கே. புகாரி மற்றும் சஜீனா பீவி. இதில் புகாரி, காட்டன் ஹில் அரசு உயர்நிலை பள்ளியில் தலைமையாசிரியராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இந்த தம்பதியின் 2வது மகள் 28 வயது  அகிலா.  சமீபத்தில் வெளியான சிவில் சர்வீசஸ் தேர்வு முடிவுகளில் அகிலா, 760வது ரேங்க்கை பெற்றுள்ளார். இவர் மிக சின்னஞ்சிறு வயதாக அதாவது  அவருக்கு 5 வயது இருக்கும் போது, பேருந்து விபத்தில் வலது கையை இழந்துள்ளார்.

யுபிஎஸ்சி

இதனால், வாழ்க்கையில் பல சோகங்களை சந்திக்க வேண்டியிருந்தது. எனினும்,இந்தியாவின் மிகப்பெரிய கவுரவமிக்க தேர்வில் அவர் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளார். 2000ல்  நடந்த விபத்தில் அகிலாவின் தோள் பகுதியில் இருந்து வலது கை முழுவதும் போய் விட்டது. ஜெர்மனியில் உள்ள மருத்துவர்களிடம்  ஆலோசனை மேற்கொள்ளும்படி கூறப்பட்டது. ஜெர்மனியில் இருந்து இந்தியா வந்த மருத்துவ குழுவினர் அவரை ஆய்வு செய்த பின்னரும், வலது கையை இணைக்க முடியவில்லை. தோள்பட்டையின் முனை பகுதியை அவர் இழந்து விட்டார் என தெரிவித்துள்ளனர்.  இதனால் இவருடைய அன்றாட  பணிகளை இடது கையை கொண்டு செய்து பழகியுள்ளார். அதே போல் இடது கையாலேயே, எழுதவும், வரையவும்  கற்று கொண்டார். இவர் வாரிய தேர்வில் அதிக மதிப்பெண்களை பெற்று தேர்ச்சி அடைந்து உள்ளார். அதன்பின் சென்னை ஐ.ஐ.டி.யில் ஒருங்கிணைக்கப்பட்ட எம்.ஏ. படிப்பு முடித்த பின்பு, சிவில் சர்வீசஸ் தேர்வுக்கு தயாராகி  வந்தார்.  

சிவில் சர்வீஸ்

அவருடைய  முதல் 2 முயற்சிகளில் முதல்நிலை தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார். இந்த வெற்றி பற்றி அகிலா கூறும்போது, ஐ.ஏ.எஸ். பணி குறித்து என்னுடைய ஆசிரியர்கள் விரிவாக விளக்கம் அளித்தனர்.  பற்றி எனது ஆசிரியரே எனக்கு விரிவாக எடுத்து கூறினார். அந்த கனவை எனக்குள் விதைத்தவர்கள் ஆசிரியர்களே. கலெக்டராகும் எண்ணம் அதன் பின்பே எனக்கு வந்தது. பட்டப்படிப்பு முடித்த பிறகு கலெக்டர் படிப்பிற்கு  தயாராக தொடங்கினேன் . பெங்களூருவில்  அமைந்துள்ள மையத்தில் ஒரு வருடம் பயிற்சி பெற்று, கேரளாவில் இருந்து படிக்க தொடங்கினேன். அங்கேயும் திருவனந்தபுரத்தில் மையம் ஒன்றில் சேர்ந்து படித்தேன். தேர்வுக்கு தயாராக மிக பெரிய கடின உழைப்பை கொடுக்க வேண்டும். பல்வேறு ஏற்ற, இறக்கங்களை சந்திக்க வேண்டும். நீண்டகாலம் எடுக்கும். தேர்வுக்கு தொடர்ச்சியாக 3 முதல் 4 மணிநேரம் வரை படிப்பேன் என கூறியுள்ளார். ஐ.ஏ.எஸ். தான் எனது கனவு, இலட்சியமாக இருந்தது. அந்த கனவு இன்று நனவாகியுள்ளது. விருப்பத்தை பூர்த்தி செய்ய அது தேர்ச்சி பெறும் வரை படிப்பது என தீர்மானம் கொண்டேன். அதன்படி 3 முறை நான் தேர்வு செய்யப்பட்டுள்ளேன் என கூறியுள்ளார். 

ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

From around the web