பகீர்... பேச முடியாத 6 வயது மகனை முதலைகள் கால்வாயில் வீசிய தாய்!

 
முதலை

 கர்நாடக மாநிலம், தண்டேலியில்  வாடகை வீட்டில் வசித்து வரும் தம்பதி ரவிக்குமார் ஷெல்லே மற்றும் சாவித்ரி. இவர்களுடைய  6 வயது மகன் வினோத் பேச முடியாதவர்.  மாற்றுத்திறனாளி குழந்தை குறித்து தம்பதியர் இடையே அடிக்கடி சண்டை சச்சரவு ஏற்படுவதுண்டு. இந்த தொடர் சண்டைகளால் மனமுடைந்து விரக்தி அடைந்த தாய் சாவித்திரி  தூங்கிக்கொண்டிருந்த மகனை தூக்கிச்சென்று அருகிலுள்ள முதலைகள் நிறைந்த கால்வாயில் வீசிவிட்டார்.  வீடு திரும்பியதும் மனம் பொறுக்காமல்   சாவித்ரி தன் மகனை முதலைகள் நிறைந்த கால்வாய் தண்ணீரில் வீசிவிட்டதாகவும் தயவு செய்து அவனை காப்பாற்றுங்கள் எனவும் கதறி அழுதார்.

வினோத்

அக்கம்பக்கத்தினர் உடனடியாக அவனை தேட ஆரம்பித்தனர்.   கிராமிய காவல் நிலையத்துக்கும் தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவைச் சேர்ந்த காவல்துறை அதிகாரிகள் மற்றும் மீட்புக் குழுவினர்  உடனடியாக  சம்பவ இடத்திற்கு வந்து சிறுவனை தேடும் பணியில் ஈடுபட்டனர்.நீண்ட நேரமாகியும்  சிறுவனை கண்டுபிடிக்க முடியவில்லை. சிறுவனை தாய் நேரடியாக கால்வாயில் வீசியிருக்கலாம் என்பதை நாங்கள் உணர்ந்தோம் என கிராமவாசி ஒருவர் தெரிவித்தார்.

முதலை

இதனை நேரில் பார்த்த  சந்தோஷ்  முதலை ஒரு சிறுவன்  உடலை வாயில் வைத்திருப்பதை  பார்த்தோம். மீட்புக் குழுவினர் மீண்டும் தேடுதல் பணியைத் தொடங்கிய பின்னர் ஞாயிற்றுக்கிழமை காலை சிறுவனின் உடலின் சிதைந்த பாகங்கள் கண்டெடுக்கப்பட்டதாக கூறினார்.  
வினோத்தால் என்ன பயன். அவன் சாப்பிட்டுக்கொண்டே இருக்கிறான். அவனை வேறு எங்கேயாவது தூக்கி எறி. அவன் சாகட்டும் என தன் கணவர் அக்கடி கூறுவார் என  சாவித்திரி போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார் .   இச்சம்பவம்  குறித்து  தம்பதி மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு தீவிர விசாரணை மேற்க்கொள்ளப்பட்டு வருகிறது.  

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web