திருச்சியில் புதுப்பொலிவுடன் புதிய விமான நிலைய முனையம் பயன்பாட்டுக்கு வந்தது.!

 
திருச்சி

 திருச்சி விமான நிலையத்தில் ஒருங்கிணைந்த முனையம் புதிதாக கட்டப்பட்டுள்ளது.  திருச்சி விமான நிலையத்தில்  60,723 சதுரமீட்டர் பரப்பளவில் 2 அடுக்குகளைக் கொண்டதாக புதிதாக கட்டப்பட்டிருந்தது.  இதில், ஒரே சமயத்தில் 4,000 சர்வதேச பயணிகள், 1,500 உள்நாட்டு பயணிகளை கையாள முடியும். இங்கு புறப்பாடு பகுதியில் 10 வாயில்கள், வருகை பகுதியில் 6 வாயில்கள், 40 குடியேற்றப்பிரிவு மையங்கள், 48 செக்-இன் மையங்கள், 3 சுங்கப்பிரிவு மையங்கள், 15 இடங்களில் எக்ஸ்ரே சோதனை மையங்கள், 10 இடங்களில் ஏரோ ப்ரிட்ஜ், 3 இடங்களில் விஐபி காத்திருப்பு அறைகள், 26 இடங்களில் லிப்ட் மற்றும் எஸ்கலேட்டர், 1,000 கார்களை நிறுத்தும் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

திருச்சி

ஸ்ரீரங்கம் ராஜகோபுரம் போன்ற மாதிரி கோபுரம் புதிய முனையத்தின் முகப்பில் காண்பவர்களை கவரும் வண்ணம் அமைக்கப்பட்டுள்ளது. 
இந்நிலையில் திருச்சியில் ரூ.1,100 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள புதிய விமான நிலைய முனையம் பயன்பாட்டுக்கு வந்ததாக விமான நிலைய நிர்வாகம் அறிவித்துள்ளது.  திருச்சி சர்வதேச விமான நிலைய புதிய முனையத்தை  ஜனவரி 2ம் தேதி பிரதமர் மோடி திறந்து வைத்தது குறிப்பிடத்தக்கது.  இதற்கான மீதமிருந்த பணிகள் அனைத்தும் நிறைவுற்று முடிந்த நிலையில் இன்று முதல் புதிய விமான முனையம் மக்கள் பயன்பாட்டிற்கு வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web