பாழாய் போன எதிர்காலம்... கணவனுடன் சேர்ந்து நாத்தனாரும் கொடுமை... தூக்கில் தொங்கிய இளம்பெண்!
இந்நிலையில் கடந்த சில மாதங்களாக சுனில் அடிக்கடி மீண்டும் பூஜாவின் பெற்றோரிடம் வரதட்சணை கேட்டு வாங்கி வருமாறு மனைவியிடம் தகராறு செய்து வந்துள்ளார். ஆனால் பூஜா வரதட்சணை கொடுக்க மறுத்து விட்டார். இதனிடையே சுனிலின் சகோதரி உட்பட குடும்பத்தினர் அனைவருமே பூஜாவிடம் வரதட்சணை கேட்டு துன்புறுத்தி வந்துள்ளனர். இதனால் பூஜா மிகவும் மனமுடைந்தார். இது குறித்து பெற்றோரிடம் கூறிய பூஜா நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பூஜாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சுனில் மற்றும் அவரது குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!