இறந்த என் புருஷன கடைசியா ஒரு தடவ பாக்கணும்.... குவைத்தில் இருந்து கதறும் மனைவி!!

 
மகாலட்சுமி


தஞ்சை மாவட்டம் கும்பகோணம்   திப்பிராஜபுரத்தில்வசித்து வருபவர்  ரவிச்சந்திரன். இவர் அக்டோபர் 22ம் தேதி  மாரடைப்பால் காலமானார். இவரது மனைவியான மகாலட்சுமி, குவைத்தில் பணிபுரிந்து வருகிறார்.  இதனால் மகாலட்சுமி அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தார்.  கணவர் ரவிச்சந்திரன் இறுதி சடங்கில் பங்கேற்பதற்காக முயற்சி வருகிறார். ஆனால் மகாலட்சுமி பணிபுரியும் குவைத் நிறுவனம் அவருக்கு அனுமதி மறுத்துள்ளது.  


இதுகுறித்து, தஞ்சை மாவட்ட ஆட்சியர், மாண்புமிகு வெளிவாழ் தமிழர்கள் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் ஆகியோருக்கு, மறைந்த ரவிச்சந்திரன் மற்றும் மகாலட்சுமியின் மகள் ரம்யா நீலமேகம் கோரிக்கை கடிதம் அனுப்பியுள்ளார். மேலும் குவைத்தில் இருந்து மகாலட்சுமி  வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்   தனது கணவர் ரவிச்சந்திரனின் இறுதி சடங்கில் கலந்து கொள்ள  வேண்டும் , கணவரின்  முகத்தை கடைசியாக பார்க்க வேண்டும் . உடனடியாக   தான் தமிழ்நாட்டுக்கு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கண்ணீர் மல்க தமிழ்நாடு  அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

மகாலட்சுமி
 இது குறித்து   தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல் முருகன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்  தனது கணவரின் முகத்தை இறுதியாக பார்க்க முடியாதோ என்ற தவிப்பும், அச்சமும், மகாலட்சுமியிடம் ஏற்பட்டுள்ளது.  இவ்விவகாரத்தில் தமிழகஅரசு உடனடியாக தலையிட்டு, கணவர் இறந்த துக்கம் தாங்காமல் குவைத்தில் தவித்து வரும் மகாலட்சுமியை,   உடனடியாக தமிழ்நாட்டுக்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி  சார்பில் தெரிவித்துள்ளார்.  

ஐப்பசி மாத புனித நீராடலின் மகத்துவம்.. மிஸ் பண்ணீடாதீங்க!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

கிடுகிடுவென உடல் எடை குறைய தினம் இந்த பழம் சாப்பிட்டு பாருங்க...!!

ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் ஐப்பசி மாத பண்டிகைகள், சிறப்புக்கள்!!

From around the web