சுயநலமில்லாத அயராத உழைப்பாளி... நடிகை கெளதமியின் முடிவு வருத்தமளிக்கிறது... நடிகை குஷ்பு!

 
குஷ்பு கெளதமி
இன்று காலை நடிகை கெளதமி, பாஜகவில் இருந்து விலகுவதாக தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பக்க அளவிற்கான விளக்கத்துடன் அறிவித்திருந்தார். இது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கடந்த தேர்தலில் நடிகை கெளதமிக்கு ராஜபாளையம் தொகுதி ஒதுக்கப்படும் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில், நடிகை கெளதமியின் பாஜக விலகல் குறித்து பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.  கெளதமியின் விலகல் குறித்து நடிகை குஷ்பு, அவரது ட்விட்டர் பக்கத்தில் "எனது சக உறுப்பினரான நடிகை கெளதமி பாஜகவில் இருந்து வெளியேறியது வருத்தமாக உள்ளது. அவர் நல்ல பண்பாளர்’’  என்று தெரிவித்துள்ளார். மேலும் சுயநலமில்லாத, கடின உழைப்பாளியாக பாஜகவில் அவர் பணியாற்றினார். அவரது எதிர்கால திட்டங்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள் என்று நடிகை குஷ்பு தெரிவித்துள்ளார்.

பிரபல நடிகையான கௌதமி பாஜகவில் கடந்த 25 ஆண்டுகளாக பணியாற்றி வந்தார். அண்மையில் அன்பழகன் என்பவர் தன்னிடம் இருந்து பணம், சொத்து ஆவணங்கள் ஆகியவற்றையும் மோசடி செய்ததாக சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்திருந்தார்.


இந்த புகார் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் அன்பழகனுக்கு ஆதரவாக பாஜக மூத்த நிர்வாகிகள் ஆதரவு தெரிவித்து வருவதாகவும் அவர் குற்றம்சாட்டி பாஜகவில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.

கெளதமி

இந்நிலையில் அவர் விலகல் குறித்து தேசிய மகளிர் ஆணைய உறுப்பினரும் நடிகையுமான குஷ்பு, தனது எக்ஸ் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அதில், "எனது சக உறுப்பினரான கெளதமி பாஜகவில் இருந்து வெளியேறியதைக் கண்டு வருத்தமடைந்தேன்; அவர் மிகவும் கடின உழைப்பாளி மற்றும் தன்னலமற்ற கட்சிப் பணியாளர்; அவரது எதிர்கால திட்டங்கள் அனைத்தும் சிறப்பாய் அமைய வாழ்த்துகிறேன்" என குறிப்பிட்டுள்ளார்.

ஐப்பசி மாத புனித நீராடலின் மகத்துவம்.. மிஸ் பண்ணீடாதீங்க!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

கிடுகிடுவென உடல் எடை குறைய தினம் இந்த பழம் சாப்பிட்டு பாருங்க...!!

ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் ஐப்பசி மாத பண்டிகைகள், சிறப்புக்கள்!!

From around the web