ரசிகர்கள் அதிர்ச்சி.. நடிகை ராஷ்மிகா மந்தானாவிடம் ரூ.80 லட்சம் மோசடி!

 
ராஷ்மிகா மந்தனா

இந்தியாவில் அனைத்து மொழிகளிலும் நடிக்கவில்லை என்றாலும், நாடு முழுவதும் ரசிர்களை கொண்டவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. தமிழில் கார்த்தியின் சுல்தான் படம் மூலம் அறிமுகமானார். தொடர்ந்து விஜய் ஜோடியாக வாரிசு படத்தில் நடித்தார். 

தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம்வரும் இவர், ஏராளமான படங்களில் நடித்துள்ளார். அதில் பெரும்பாலானவை ஹிட் கொடுத்ததால் பிரபலமாகி விட்டார். இந்தி படங்களிலும் நடித்து வருகிறார். ராஷ்மிகா மந்தனா, தற்போது அல்லு அர்ஜுன் நடித்த புஷ்பா 2 படத்தில் நடித்து வருகிறார்.

ராஷ்மிகா மந்தனா

இந்த நிலையில் அவரிடமே பெரும் மோசடி நடந்துள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. ராஷ்மிகா மந்தனாவிடம் நீண்ட காலமாக பணிபுரிந்த அவரது மேலாளர் ரூ.80 லட்சத்தை ஏமாற்றி விட்டதாக கூறப்படுகிறது. இதனால் அவர் மேலாளர் வேலையில் இருந்து நீக்கப்பட்டு உள்ளார் என கூறப்படுகிறது. 

ராஷ்மிகா மந்தனா

ஆனால் இந்த மோசடி சம்பவம் குறித்து ராஷ்மிகா இன்னும் அதிகாரப்பூர்வமாக எதுவும் தெரிவிக்கவில்லை. போலீசிலும் புகார் அளிக்கவில்லை. எனினும் பிரபல நடிகை ராஷ்மிகா மந்தனாவிடம் மோசடி நடைபெற்ற நிகழ்வு திரையுலகில் பரபரப்பாக பேசப்படுகிறது. 

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

From around the web