பரபரப்பு வாக்குமூலம் ... கூலிப்படை ஏவி மனைவியை கொன்ற ராணுவ வீரர்!

 
ஜெர்மின்

 

ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடி அருகே நரிப்பையூர் வெட்டுக்காடு கிராமத்தில் வசித்து வருபவர்  விஜயகோபால். உத்தரகாண்ட்டில் எல்லை பாதுகாப்பு துணை ராணுவ வீரராக பணிபுரிந்து வந்தார். இவரது மனைவி தூத்துக்குடி மாவட்டம், மணப்பாடு  ஜெர்மின் .  இருவரும்  15 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். 14 வயதில் மகள், 10 வயதில் மகன் உள்ளனர். கணவன், மனைவி இடையே கருத்து வேறுபாட்டால், 5 ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்தனர்.  ஜூலை 17ம் தேதி நள்ளிரவு ஜெர்மின் 2 மர்ம நபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்டார்.

ஆம்புலன்ஸ்
இதுகுறித்து  அளித்த புகாரில், ‘‘ஜெர்மினை அவரது கணவர் விஜயகோபால் தான் ஆள் வைத்து கொலை செய்துள்ளார்’’ என கூறியிருந்தனர். இதனையடுத்து  பணியில் இருந்த விஜயகோபாலை, சாயல்குடி போலீசார் வரவழைத்து விசாரணை நடத்தினர். இதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. 

உத்தரபிரதேச போலீஸ்
இதுகுறித்து விஜயகோபால்  , ‘‘திருமணம் ஆகி குழந்தை பிறந்த சில ஆண்டுகளிலேயே எனக்கும், ஜெர்மினுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. ஜெர்மின் பெயரில் வீடு கட்டியதால், அவர் வீட்டை அபகரித்துக் கொண்டார். விவாகரத்து கோரிய அவர், தனக்கு ஒவ்வொரு மாதமும் ரூ.17,000 ஜீவனாம்சம் வழங்க வேண்டும் என  வழக்கும் தொடர்ந்தார்.அவர், பலருடன் தகாத உறவில் ஈடுபட்டிருந்தது தெரிய வந்தது.  பெருத்த அவமானம் ஏற்பட்டதால்  கூலிப்படையை ஏவி கொன்றேன் என விஜயகோபால் கூறினார்’’ என்றனர். இதையடுத்து விஜயகோபாலை போலீசார் கைது செய்தனர்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?