பேராசையால் விபரீதம்... வீட்டு உரிமையாளரை கத்தியால் குத்தி கொலை செய்த இளம்பெண்!

 
திவ்யா

 கர்நாடக மாநிலம் பெங்களூருவில்  கெங்கேரி பகுதியில் வசித்து வருபவர்கள்  குருமூர்த்தி திவ்யா தம்பதியினர். இவர்களுக்கு  2 வயதில் ஒரு குழந்தையும் உண்டு. இதில்  குருமூர்த்தி சலூன் கடை வைத்து நடத்தி வருகிறார். மே 10ம் தேதி  திவ்யா வீட்டில் கொலை செய்யப்பட்ட நிலையில் பிணமாக மீட்கப்பட்டார். அத்துடன் வீட்டில்  தங்க நகைகளும் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது‌. இது குறித்து  காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில் அதிர்ச்சி தரும் தகவல்கள் வெளியாகின. அதன்படி  வீட்டின் மேல் தளத்தில் வாடகைக்கு இருந்த இளம் பெண்ணிடம்  விசாரணை நடத்தினர்.


அந்த இளம் பெண் 24 வயது  மோனிகா  . இவர் கோளார் மாவட்டத்தைச் சேர்ந்தவர். இவர் பெங்களூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த நிலையில் சமூக வலைதளங்களில்  ரீல்ஸ் போடுவதில் ஆர்வம் அதிகம். மோனிகா  ஒருவரை காதலித்து வந்த நிலையில் அவரை  தன்னுடைய கணவர் என மற்றவர்களிடம் அறிமுகப்படுத்தினார்.

போலீஸ்

அவருடைய காதலன் எப்போதுவது வீட்டிற்கு வந்துவிட்டு செல்வதும் வழக்கமாக இருந்து வருகிறது.  இந்நிலையில் தன்னுடைய காதலனுடன் ஆடம்பர வாழ்க்கை வாழ ஆசைப்பட்டு அவர் பலரிடம் கடன் வாங்கத் தொடங்கினார். கடன் சுமை கழுத்தை நெரிக்க தொடங்கியதும் மோனிகாவுக்கு என்ன செய்வதெனத் தெரியவில்லை.  அதே நேரத்தில்  காதலனுக்கு சரக்கு ஆட்டோ ஒன்று வாங்கிக் கொடுக்கவும் திட்டமிட்டார்.  வீட்டின் உரிமையாளர் ஆன திவ்யா தங்க நகைகள் அணிந்திருப்பதை பார்த்து அதனை எப்படியாவது  கொள்ளையடிக்க திட்டமிட்டார். மே 10ம் தேதி  வீட்டில் திவ்யா தனியாக இருப்பதை தெரிந்து கொண்ட மோனிகா அவரிடம் சென்று பேசுவது போல் நடித்து கழுத்தை நெரித்து அவரை கொலை செய்துவிட்டார்.  அவரிடம் இருந்த தங்க நகைகளை கொள்ளையடித்து விட்டு சென்றதும் விசாரணையில் தெரியவந்தது. இதன்பேரில்  இளம்பெண் மீது கொலை வழக்கு பதிவு செய்து காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இச்சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web