சிவகாசி பட்டாசு ஆலையில் பயங்கர விபத்து... வெடித்து சிதறிய இயந்திரம்.. சுக்குநூறாக இடிந்து விழுந்த கட்டிடம்!

 
சிவகாசி வெடி விபத்து

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் வசித்து வருபவர் விக்னேஷ். இவருக்கு சொந்தமான கட்டிடத்தில் சந்தன மகாலிங்கம் என்பவர் தொழிற்சாலை நடத்தி வருகிறார். பட்டாசு தயாரிக்க பயன்படும் அட்டை குழாய்களுக்கான UV பூச்சு தொழிற்சாலையை நடத்தி வருகிறார். இங்கு நேற்று இரவு வழக்கம் போல் வியாபாரம் நடந்தது. வேலை முடிந்து தொழிலாளர்கள் சென்றபோது, அங்கிருந்த ஹீட்டர் இயந்திரம் அணைக்கப்படாமல் இருந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இன்று காலை அந்த தொழிற்சாலை பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. இதனால் ஆலை கட்டிடம் நொறுங்கி விழுந்தது. இந்த விபத்து குறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்ததன் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைத்தனர். இடிபாடுகளில் யாராவது சிக்கியுள்ளார்களா என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.

இந்த விபத்தில் பக்கத்து வீட்டில் வசிக்கும் ராணி என்ற பெண் பலத்த காயம் அடைந்தார். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

 தமிழ் புத்தாண்டில் பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்! 

From around the web