அதிகாலையில் பயங்கர தீ விபத்து... பற்றி எரிந்த வணிக வளாகம்... பல லட்ச ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் சேதம்!

 
தீ

சென்னை சவுகார்பேட்டை மிண்ட் தெருவில் ஏராளமான துணிக் கடைகள் உள்ளன. இங்கு மொத்தமாகவும் சில்லறையாகவும் விற்பனை செய்யப்படுகின்றன. குறைந்த விலையிலும் துணிகள் கிடைக்கும். இதனால் நாள்தோறும் வியாபாரிகள், பொதுமக்கள் திரண்டு துணிகளை வாங்கிச்செல்வர். இதனால் கூட்டம் அலைமோதும். ஏராளமானோர் தங்கள் வீட்டு விசேஷங்களுக்கு துணி வாங்குகிறார்கள்.

இந்த பகுதி எப்போதும் மக்கள் நெரிசல் மிகுந்த பகுதியாகவே காணப்படும். அதோடு லோடு ஏற்றிவரும் சரக்கு வாகனங்கள், பைக்குககள், ரிக்சா என்ற குறுக்கலான சாலைகளும் வாகனங்கள் நிறைந்து காணப்படும். இந்த நிலையில் மிண்ட் தெருவில் உள்ள வணிக வளாகத்தில் இன்று அதிகாலை 3 மணியளவில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தீ

வணிக வளாகத்தில் பற்றிய தீயானது ஒரு கட்டடத்திலிருந்து அருகில் இருந்த கடைகளுக்கும் பரவியது. இதனால் தீ மளமளவென பற்றி எரிந்தது. உடனே இந்த தீவிபத்து தொடர்பாக அக்கம்பக்கத்தினர் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

வண்ணாரப்பேட்டை, எழும்பூர் உள்ளிட்ட 6 இடங்களில் இருந்து தீயணைப்பு வாகனங்களில் 50-க்கும் மேற்பட்ட வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்தனர். அவர்கள் 2 மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த தீவிபத்து தொடர்பாக வழக்குப் பதிவு செய்த பூக்கடை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தீ

மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. மொத்தம் 11 கடைகளில் பல கடைகள் தீவிபத்தில் சிக்கியதாகவும், பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

From around the web