கோர விபத்து.. நேருக்கு நேர் மோதிக்கொண்ட கார்கள்.. 11 பேர் படுகாயம்!

 
கேத்தாண்டபட்டி விபத்து

ஓசூர் பகுதியை சேர்ந்த தனியார் நிதி நிறுவன ஊழியர்  சுரேஷ் மற்றும் அவரது நண்பர்கள் அசோக்,பாபு,திலிப் புருஷோத்தமன், மனோஜ் ஆகியோர் பள்ளி கொண்டா பகுதியில் நடைபெறும் நண்பரின் திருமணத்துக்கு வந்து திருமணம் முடிந்து கொண்டு மீண்டும் ஓசூர் நோக்கி காரில் சென்றுள்ளனர். காரை மனோஜ் என்பவர் ஒட்டி சென்றார்.

அந்த கார்  கேத்தாண்டபட்டி அருகே உள்ள  சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் சென்ற போது  திண்டுக்கல் பகுதியை சேர்ந்தவர் தங்கராஜ் இவர் நெல்லூர் தனியார் வங்கியில் பணியாற்றி வருகிறார்.இவர் மற்றும் இவரது தந்தை ஜெகதீஷ்,தங்கராஜின் மனைவி  சரண்யா  குழந்தைகள் முகில் ஆதி,சிபியுகன் ஆகியோர் திண்டுகள் பகுதியில் இருந்து நெல்லூர் நோக்கி சென்றனர். 

இந்த காரை தங்கராஜ் ஒட்டி சென்றார்.தங்கராஜ் சென்ற கார் கட்டுப்பாட்டை இழந்து தடுப்பு கம்பிகளை உடைத்து கொண்டு எதிர் திசையில்   சுரேஷ் சென்ற கார் மீது மோதி விபத்துக்குள்ளானதில். இரண்டு கார்களில் பயணம் செய்த 11 பேர் படுகாயங்களுடன் கார்களில் சிக்கி கொண்டனர்.இதை பார்த்த அப்பகுதி மக்கள் விரைந்து சென்று காரில் சிக்கிக்கொண்ட 11 பேரை மீட்டு சிகிச்சைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று அனுமதித்தனர்.

இந்த விபத்தில் சிக்கிய இரண்டு கார்களும் சாலையின்  குறுக்கே நின்றதால் தேசிய நெடுஞ்சாலையில் பெரும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த நெடுஞ்சாலை போலிசார் மற்றும் நாட்றம்பள்ளி போலிசார் விரைந்து வந்து கார்களை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்தனர். 

இந்த விபத்தால்  தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 1 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கபட்டது. மேலும் இந்த விபத்து தொடர்பாக நாட்றம்பள்ளி போலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web