“அவனில்லாத வாழ்க்கை எனக்கு வேண்டாம்...” தற்கொலைக்கு முன்பு ஷர்மிளா எழுதிய உருக்கமான கடிதம் சிக்கியது!

 
ஷர்மி
 

எதிர்ப்பையும் மீறி தனது தங்கையைக் காதல் திருமணம் செய்து கொண்டதால், தங்கை கணவனை நடுரோட்டில் கடந்த பிப்ரவரி 23ம் தேதி நண்பர்களுடன் சேர்ந்து கூடப் பிறந்த அண்ணனே வெட்டிக் கொலைச் செய்தது தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை கிளப்பியது. 
இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்த போலீசார், கொலை செய்த ஷர்மிளாவின் அண்ணனையும், அவனது நண்பர்களையும் கைது செய்தனர். 
இந்நிலையில், காதல் கணவன் கொலைச் செய்யப்பட்ட நிலையில், வழக்கில் முன்னேற்றம் ஏதும் இல்லை என்றும், கொலைக்கு உடந்தையான தனது தாய், தந்தை மற்றுமொரு சகோதரர் மீது எந்த வழக்கும் பதியப்படவில்லை என்றும் ஷர்மிளா போலீசார் மீது குற்றம் சுமத்தி, மன அழுத்தத்தில் இருந்து வந்தார்.

ஷர்மி
இந்நிலையில், தனது கணவரின் பெற்றோருடன் வசித்து வந்த ஷர்மிளா, கடந்த 14ம் தேதி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றார்.  பிரவீனின் தாய், தந்தையர் இதைப்பார்த்து பதறியடித்து, உடனடியாக ஷர்மிளாவை மீட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். கழுத்து எலும்புகளும், நரம்புகளும் கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில், தனியார் மருத்துவமனையில் இருந்து மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். 

ஆம்புலன்ஸ்
இந்நிலையில், சிகிச்சைப் பலனளிக்காமல் ஷர்மிளா மருத்துவமனையில் பரிதாபமாக உயிரிழந்தார். அவரது உடலை கைப்பற்றிய போலீசார், பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விட்டு, ஷர்மிளாவின் வீட்டில் சோதனை செய்தனர். அப்போது ஷர்மிளாவின் டைரியை கைப்பற்றினர். 
தான் தூக்கிட்டு தற்கொலைச் செய்து கொள்வதற்கு முன்பாக, டைரியில் ஷர்மிளா எழுதிய உருக்கமான கடிதம் கிடைத்தது. அதில், 'என்னால் என் கணவர் பிரவீன் இல்லாமல் இருக்க முடியல. நான் சாகப் போறேன். என் சாவிற்கு எனது தந்தை துரைக்குமார், தாய் சரளா, சகோதரர்கள் நரேஷ், தினேஷ் ஆகியோர் தான் காரணம்.
பிரவீனை சாகடிச்சு என்கிட்ட இருந்து பிரிச்சுட்டாங்க. எங்களை வாழ விடாம பண்ணிட்டாங்க. அவன் இல்லாத இந்த வாழ்க்கை எனக்கு வேண்டாம். நானும் அவன் கூடவே போறேன்" என உருக்கமாக எழுதி வைத்துள்ளார். இந்த கடிதத்தைக் கைப்பற்றி போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web