விநாயகருக்கு இரு தேவியருடன் திருக்கல்யாண உற்சவம்!

 
சித்தி புத்தி
 

தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் தாலுகா, மெலட்டூரில் அமைந்துள்ளது  சித்தி, புத்தி தெட்சணாமூர்த்தி விநாயகர். இவர் திருமண வரம் அருளும் விநாயகர்.  இங்கு சித்தி, புத்தி தெட்சணாமூர்த்தி விநாயகருக்கு திருக்கல்யாண உற்சவம் நடைபெறும். இந்த  திருக்கல்யாண வைபத்தில், திருமணமாகாத பெண்கள் கலந்து கொண்டு தட்சணாமூர்த்தி விநாயகரை பிரார்த்தனை செய்து கொண்டால் விரைவில் திருமணம் கைகூடும் என்பது ஐதீகம். 

இவ்வாறு ஆன்மிக சிறப்பு பெற்ற மெலட்டூர் சித்தி புத்தி தட்சணாமூர்த்தி விநாயகர் கோயிலில் விநாயகர் சதுர்த்தி விழா நடைபெற்று வருகிறது. விழாவின் 7வதுநாள் நிகழ்ச்சியாக இன்று திருக்கல்யாண வைபவம் நடைபெற்று முடிந்துள்ளது. இந்த திருக்கல்யாண வைபவத்தை முன்னிட்டு காலை சுவாமி தெட்சணாமூர்த்தி, சித்தி, புத்தியுடன் கோவில் சன்னதியில் இருந்து புறப்பட்டு  வீதி உலா வந்து  கோவில் அருகே அமைக்கப்பட்டிருந்த அலங்கார பந்தல் திருமண மேடையை அடைந்தார். 

சுவாமியுடன் பக்தர்கள் சீர்வரிசை தட்டு, தாம்பூலம் எடுத்து ஊர்வலமாக வந்தனர். பின்னர் திருமண மண்டபத்தில் அக்னி ஹோமம் வார்க்கப்பட்டு சகல சடங்கு, சம்பிரதாயங்கள் படி வேத மந்திரங்கள், மங்கள வாத்தியங்கள் முழங்க சுவாமிக்கு அம்பாள் சித்தி, புத்தியுடன் திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. திருக்கல்யாண வைபவத்தில் திருவாவடுதுறை ஆதீனம் அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் கலந்து கொண்டு பக்தர்களுக்கு அருளாசி வழங்கியுள்ளார்.  

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?