இளம்பெண் மருத்துவர் தற்கொலை... நோயாளிகளைப் பரிசோதித்துக் கொண்டிருந்த நிலையில் திடீரென விபரீத முடிவு!

 
கலாதேவி

மக்களிடையே மன அழுத்தம் அதிகரித்துள்ள நிலையில், எதையும் எதிர்கொள்ளும் தைரியத்தையும் இந்த தலைமுறையினருக்கு கற்றுத்தர மறந்து விட்டோம். கூட்டுக்குடும்பங்கள் சிதைந்து தனித்தனி குடும்பங்களாக வாழ துவங்கி நிலையில், எதற்கெடுத்தாலும், வாழ்க்கையை இழந்து விட்டதாக தற்கொலை முடிவெடுக்கும் போக்கு சமீபமாய் அதிகரித்துள்ளது. அதிலும், கல்லூரி மாணவிகள், இளம்பெண்களிடையே தற்கொலைச் செய்து கொள்கிற போக்கு அதிகரித்துள்ளது. இந்நிலையில், தனியார் மருத்துவமனையில் பெண் மருத்துவர் ஒருவர் நோயாளிகளைப் பரிசோதித்துக் கொண்டிருந்த நிலையில், திடீரென தனது அறைக்குச் சென்று தூக்கிட்டு தற்கொலைச் செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா அருகே அம்பாசமுத்திரத்தைச் சேர்ந்தவர் மருத்துவர் கலாதேவி(26). திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த கவரைப்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் கலாதேவி கடந்த 8 மாதங்களாக மருத்துவராக பணி புரிந்து வந்தார். அதே மருத்துவமனையின் எதிர்ப்புறத்தில் உள்ள தனியார் கட்டிடம் ஒன்றின் மாடியில் வாடகைக்கு தனி அறை எடுத்து, அங்கு தங்கியிருந்தபடியே மருத்துவமனைக்கு தினந்தோறும் சென்று வந்தார்.

தற்கொலை

இந்நிலையில், நேற்று பிற்பகல் அவர் கிளினிக்கில் நோயாளிகளை பார்த்து கொண்டிருந்த நிலையில் திடீரென தனது அறைக்கு சென்று விட்டு வருவதாக அங்கு இருந்த நர்சுகளிடம் கூறிவிட்டு சென்றார். நீண்ட நேரம் ஆகியும் அவர் வராதது கண்ட நர்சுகள் கிளினிக்கின் எதிர்புறம் மாடியில் உள்ள அவரது அறைக்கு சென்று பார்த்தனர். 

அப்போது, அங்கு இருந்த மின்விசிறியில் சேலையால் கலாதேவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பது தெரிய வந்தது. இதையடுத்து இந்த சம்பவம் குறித்து கவரப்பேட்டை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு கும்மிடிப்பூண்டி துணை போலீஸ் சூப்பிரண்டு கிரியா சக்தி நேரில் சென்று விசாரணை நடத்தினார். சம்பவ இடத்தில் இருந்து போலீசார் டாக்டர் கலாதேவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

Kavaraipettai PS

தற்கொலை செய்து கொண்ட மருத்துவர் கலாதேவியின் செல்போனை பறிமுதல் செய்து போலீசார் முதல் கட்ட விசாரணையை தொடங்கி உள்ளனர். கடைசியாக கலாதேவி யாருடன் செல்போனில் பேசினார் என்பது உட்பட பெண் மருத்துவரின் தற்கொலைக்கான காரணம் என்ன? என்பது உடனடியாக தெரியாத நிலையில் கவரப்பேட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web