சோகத்தில் முடிந்த கொண்டாட்டம்... ஓடும் ரயிலில் ஏற முயன்ற இளம்பெண் மரணம்!
மதுரையில் நகைக்கடை உரிமையாளரான செல்வகுமார் தனது மனைவி கார்த்திகாதேவி மற்றும் குழந்தைகள் அடங்கிய 13 பேர் கொண்ட குழுவினராக கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விடுமுறையை கொண்டாட மதுரையில் இருந்து திருவனந்தபுரம் சென்றுள்ளனர்.
அவர்கள் ரயிலில் எஸ் 3 கோச்சில் டிக்கெட் முன்பதிவு செய்திருந்த நிலையில் தங்களது கொண்டாட்டங்களை முடித்துக் கொண்டு மதுரை திரும்புவதற்காக ரயிலுக்காக பிளாட்பாரம் 3ல் காத்திருந்துள்ளனர். ஆனால் ரயில் அந்த பிளாட்பாரத்திற்கு வராமல் மற்றொரு பிளாட்பாரத்திற்கு வந்துள்ளது. குடும்பத்தினர் 13 பேரும் அவசர அவசரமாக ரயில் செல்வதைப் பார்த்து ஓடிச்சென்று ரயிலை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் கார்த்திகா ரயிலில் ஏறும் போது வழுக்கி கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
உடனடியாக கார்த்திகா தேவியின் உறவினர்கள் அலறிய சப்தம் கேட்டதையடுத்து ரயில் உடனடியாக நிறுத்தப்பட்டது. இது குறித்து தும்ப போலீசார் மற்றும் ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து, கார்த்திகா தேவியின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விட்டு, மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர். நேற்றிரவு 7.45 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!