10 ஆண்டு தீராக்காதல்... பிலிப்பைன்ஸ் பெண்ணை கரம் பிடித்த தமிழ் இளைஞர்!

புதுச்சேரி மாநிலத்தில் முத்தியால்பேட்டை பகுதியில் வசித்து வருபவர் வெங்கட்ராம் . இவர் பி.டெக் வரை படித்து முடித்துவிட்டு பிலிப்பைன்ஸ் நாட்டில் வேலை பார்த்து வந்தார். வெங்கட்ராம் அதே நாட்டில் கிலேசி பெத் என்ற பெண்ணை காதலித்து வந்தார். இருவரும் கடந்த 10 வருடங்களாக காதலித்து வந்த நிலையில், வெங்கட்ராம் பணி முடிவடைந்து மீண்டும் சொந்த ஊருக்கு திரும்பிவிட்டார்.
அதன் பிறகும் இருவரும் செல்போன் மூலம் பேசி காதலை வளர்த்து வந்தனர். இந்த விஷயம் இரு வீட்டாருக்கும் தெரிய வரவே அவர்கள் இருவருக்கும் திருமணம் செய்து வைக்க இரு குடும்பத்தினரும் முடிவு செய்தனர். அதன்படி இருவருக்கும் ஒரு கோவிலில் வைத்து திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்தில் உறவினர்கள், நண்பர்கள் மற்றும் இரு வீட்டாரும் கலந்து கொண்டனர். மேலும் இது குறித்த புகைப்படங்களும், வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வரும் நிலையில் தம்பதிகளுக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!