ஹெல்மெட்டால் அடித்ததில் சுருண்டு விழுந்த இளம்பெண்.... கோயம்பேடு மேம்பாலத்தில் அதிர்ச்சி!

 
ஹெல்மெட்
 

சென்னை கோயம்பேடு மேம்பாலத்தில் இளம்பெண் ஒருவர் மீது  அவரது ஆண் நண்பர் ஹெல்மெட்டால் சரமாரியாக தாக்குதல் நடத்தியுள்ளார்.
இந்த தாக்குதலில் நிலைகுலைந்த  அந்த பெண் அப்படியே சுருண்டு விழுந்தார். இது குறித்த  வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி  வருகிறது.
இருவரும் ஒரே இருசக்கர வாகனத்தில் வந்த போது அவர்களுக்குள் திடீரென வாக்குவாதம் ஏற்பட்டது. இந்நிலையில், நடுரோடு என்று பாராமல் இளம்பெண் மீது ஆண் நண்பர் தாக்குதல் நடத்தியுள்ளார். இது குறித்து  ஆன்லைன் மூலமாக வழக்கறிஞர் அளித்த புகாரின் பேரில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  அவர்களது  இருசக்கர வாகனத்தின் பதிவு எண்ணை வைத்து இருவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

கோயம்பேடு மேம்பாலம்

சென்னை கோயம்பேடு மேம்பால சாலை 24 மணி நேரமும்  பரபரப்பாக இயங்கிக்கொண்டு இருக்கும் சாலை. இந்த சாலையில் பேருந்துகள் ,  பைக்குகள், கார்கள் என எந்நேரமும் வாகன இரைச்சல்.   இந்த கோயம்பேடு மேம்பாலத்தில் நேற்று பிற்பகலில்  ஒரே இருசக்கர வாகனத்தில் ஆண் பெண் இருவரும் வந்துகொண்டு இருந்தனர்.
அவர்களுக்குள் திடீரென வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் இருவரும் ஒருவர் மீது ஒருவர் மாறி மாறி தாக்குதல் நடத்தினர்.  இருச்சக்கர வாகனத்தை நிறுத்திய ஆண் நண்பர், நடு ரோடு என்றும் பாராமல் இளம்பெண்ணை  தான் அணிந்திருந்த ஹெல்மெட்டை எடுத்து   தாக்கினார்.  

அந்த பெண் அடி தாங்க முடியாமல் சுருண்டு கீழே விழுந்தார். இதன் பிறகு சாலையில் மயக்கமடைந்த அந்த பெண்ணை மருத்துவமனைக்கு அழைத்து செல்ல அந்த ஆண் நண்பர் மற்றவர்களிடம் உதவி கேட்டுள்ளார். ஆனால் ஒருவரும் உதவிக்கு வரவில்லை. இதனையடுத்து அந்த இளைஞரே இருசக்கர வாகனத்தில் அமர வைத்து அங்கிருந்து அழைத்து சென்றுவிட்டார்.   வழக்கறிஞர் ஜோசப் சகாயராஜ் இந்த சண்டையை  வீடியோவாக எடுத்து ஆன்லைனில் புகாரும் அளித்துள்ளார்.  இந்த  வீடியோ தற்போது சமூகவலைதளங்களில் தீயாக  பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  
 

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web