ஆனி அமாவாசை... சதுரகிரியில் குவிந்த பக்தர்கள்!

 
சதுரகிரி

ஆனி மாத தினங்களை முன்னிட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் சதுரகிரி மலையேறி சென்று சாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று  மாலை முதலே சதுரகிரியில் தொடர்ந்து பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வருகின்றது. 

இன்று ஆனி மாத அமாவாசை தினம் என்பதால் அதிகாலை முதலே பக்தர்கள் ஆர்வமுடன் சதுரகிரி மலையில் ஏறி தரிசனம் செய்தனர்.

தமிழகத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற சதுரிகிரி  மலையில் அமைந்துள்ள சுந்தர மகாலிங்க சுவாமியை தரிசனம் செய்ய பக்தர்களுக்கு ஆனி மாதம் பிரதோஷம் மற்றும் அமாவாசை தினங்களை முன்னிட்டு ஜூன் 23ம் தேதி முதல் வனத்துறை அனுமதி அளித்துள்ளது.

இன்று முதல் சதுரகிரி மலையேற அனுமதி! CONDITIONS APPLY!

விருதுநகர் மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சதுரகிரி சுந்தரமகாலிங்க சுவாமி கோவில் அமைந்துள்ளது. இங்கு  ஒவ்வொரு மாதமும் அமாவாசை, பௌர்ணமி, பிரதோஷம் நாட்களில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். கோவிலுக்கு வரும் பக்தர்கள் மலைப்பாதைகளில் உள்ள நீரோடைகளில் இறங்கி குளிப்பதற்கும், சதுரகிரி கோவிலில் பக்தர்கள் இரவில் தங்கவும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.   

இன்று முதல் சதுரகிரி கோவிலுக்கு செல்ல தடை!
அதே நேரத்தில் அனுமதிக்கப்பட்ட நாட்களில் மழையோ அல்லது நீரோடைகளில் நீர்வரத்து அதிகமாக இருந்தாலோ மலையேறி கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி இல்லை. இந்நிலையில் சதுரகிரி மலைக் கோயிலுக்கு பக்தர்கள் செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவிலில் ஆனி மாத பிரதோஷம், அமாவாசை வழிபாட்டிற்காக பக்தர்கள் மலையேற அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில், இன்று பக்தர்கள் ஆயிரக்கணக்கில் குவிந்து தரிசனம் செய்து வருகின்றனர். 

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது