விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: நாம் தமிழர் வேட்பாளராக களமிறங்கும் அபிநயா!

 
அபிநயா

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி சட்டப் பேரவை இடைத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் மருத்துவர் அபிநயா போட்டியிடுவார் என, அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளார்.விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி திமுக எம்எல்ஏ நா.புகழேந்தி உடல்நலக்குறைவால் கடந்த ஏப்ரல் 6ம் தேதி உயிரிழந்தார். இதைத் தொடர்ந்து காலியானதாக அறிவிக்கப்பட்ட விக்கிவாண்டி தொகுதியில் வரும் ஜூலை 10ம் தேதி நடைபெறும் என, தேர்தல் ஆணையம் அறிவித்தது.


இத்தொகுதியில் இன்று முதல் ஜூன் 21ம் தேதி வரை வேட்பு மனு தாக்கல் செய்ய அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. திமுக சார்பில் அன்னியூர் சிவா அறிவிக்கப்பட்டுள்ளார். தமிழகத்தில் உள்ள மற்ற அரசியல் கட்சிகள் தங்கள் கட்சி, கூட்டணி சார்பில் யாரை நிறுத்தலாம் என தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றன.


இந்நிலையில் விக்கிரவாண்டி சட்டப் பேரவை இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் அறிவிக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “வரும் ஜூலை 10ம் தேதி நடைபெறவிருக்கின்ற விக்கிரவாண்டி சட்டப் பேரவை இடைத்தேர்தலில் மருத்துவர் அபிநயா போட்டியிடுகிறார்.” எனத் தெரிவித்துள்ளார். ஒவ்வொரு கட்சி வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டு வருவதால் விக்கிரவாண்டி இடைத்தேர்தல் களம் சூடுபிடிக்கத் துவங்கியுள்ளது.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!