அபிராமி... அபிராமி... விட்டு சென்ற மனைவியை... தேடிச் சென்று வெட்டிக் கொன்ற கணவன்!

 
அபிராமி

தன்னுடன் இனி வாழவே முடியாது என்று குழந்தைகளையும் அழைத்து கொண்டு தனியே வேறொரு ஊருக்குச் சென்று வசித்து வந்த மனைவியைத் தேடிச் சென்று கணவன் வெட்டிக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மதுரை மாவட்டம் குன்னத்தூரைச் சேர்ந்தவர் அபிராமி(28). இவருக்கு அதே பகுதியைச் சேர்ந்த பிரபுராஜா(32) என்பவருடன் பெற்றோர் திருமணம் செய்து வைத்தனர். தனியார் மில் ஒன்றில் பிரபு ராஜா வேலைச் செய்து வருகிறார். இந்தத் தம்பதியினருக்கு 9 வயதில் ஒரு மகளும், 7 வயதில் ஒரு மகனும் உள்ளனர்.அபிராமி

இந்நிலையில், வீட்டில் கணவன்- மனைவி இடையே அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டுள்ளது. அதாவது, பிரபு ராஜா சமீபகாலமாகத் தன் மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு அடிக்கடி தகராறு செய்துவந்தார். நாள்தோறும் இந்த தகராறு நீடித்ததால் பிரபு ராஜாவோடு இனி வாழ முடியாது என முடிவெடுத்த அபிராமி, தன் இரு குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு நெல்லை மாவட்டம் சுத்தமல்லி பகுதியில் உள்ள தன் பாட்டி ஊருக்கு சென்றுவிட்டார். அங்கு தனியே வீடு எடுத்து குழந்தைகளுடன் வசித்து வந்தார்.

அபிராமி

இந்நிலையில் தனது மனைவியைப் பார்க்க பிரபுராஜா மதுரையில் இருந்து நெல்லைக்குச் சென்றுள்ளார். அங்கு வீட்டில் இருவரும் பேசிக் கொள்ளும் போது மீண்டும் தம்பதிகளுக்குள் தகராறு ஏற்பட்டது. இதில், ஆத்திரமான பிரபுராஜா தன் மனைவி அபிராமியை அரிவாளால் வெட்டிக் கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பியோடினார். இதுகுறித்து சுத்தமல்லி போலீசார் வழக்கு பதிவு செய்து பிரபு ராஜாவைத் தேடி வருகின்றனர். பிரிந்து சென்ற மனைவியை அவரது கணவர் தேடி வந்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web