அதிர்ச்சி... மாடு குறுக்கே வந்ததால் விபத்து... வீட்டின் மோதிய பேருந்து!

 
பேருந்து

 தெலங்கானா மாநிலத்தில் ஐதராபாத்தில் இருந்து தனியார் பேருந்து 30 பயணிகளுடன் ஆந்திராவில் அமலாபுரத்திற்கு ஏப்ரல் 22ம் தேதி இரவு புறப்பட்டது.  பேருந்து சூர்யாபேட்டை மாவட்டம் முனகல கிராமத்தில்  தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த போது திடீரென குறுக்கே எருமை மாடு வந்து சேர்ந்தது.
டிரைவர் அதன் மீது மோதாமல் இருக்க முயற்சித்த போது  கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த பாழடைந்த வீட்டின் மீது மோதியது. அதன் அருகில் இருந்த மின்கம்பியும் சாய்ந்து மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

விபத்து
இந்த விபத்தில் 2 பயணிகளுக்கு லேசான காயம் ஏற்பட்டதால் அவர்களுக்கு முதலுதவி அளிக்கப்பட்டது.  அனைவரும் மாற்று பேருந்தில் அமலாபுரம் அனுப்பி வைக்கப்பட்டனர். இது குறித்து முனகல போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.வீட்டின் மீது தனியார் பேருந்து  மோதி விபத்துக்குள்ளானது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியது.

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web