பாலத்தில் விபத்து... வெடித்து சிதறிய ரசாயன டேங்கர் லாரி.. நான்கு பேர் உயிரிழப்பு - வீடியோ !!
மகாராஷ்டிரா மாநிலம் மும்பை- புனே விரைவு சாலையில் ரசாயனம் ஏற்றி சென்ற டேங்கர் லாரி ஒன்று சென்றது. லோனாவாலா என்ற இடத்தில் ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்த லாரி, பாலத்தில் சென்ற போது மற்றொரு வாகனம் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதையடுத்து டேங்கர் லாரி தீப்பிடித்து வெடித்து சிதறியது. இதில் அப்பகுதியில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
#Maharashtra Four people died and three were injured when an oil tanker caught fire after it met with an accident on the Lonavala overbridge on the Mumbai-Pune expressway #accident pic.twitter.com/3p3CsvkvIc
— Amit Chaudhary अमित चौधरी🇮🇳(Republic Bharat) (@Amit7Chaudhary) June 13, 2023
#Maharashtra Four people died and three were injured when an oil tanker caught fire after it met with an accident on the Lonavala overbridge on the Mumbai-Pune expressway #accident pic.twitter.com/3p3CsvkvIc
— Amit Chaudhary अमित चौधरी🇮🇳(Republic Bharat) (@Amit7Chaudhary) June 13, 2023
பாலத்தில் நின்ற டேங்கர் லாரி முழுவதுமாக தீப்பிடித்த நிலையில், அருகில் இருந்த காடு பகுதிகளுக்கும் தீ பரவியது. அப்போது லாரியில் இருந்து வெடித்த தீப்பிழம்புகள் அருகே சென்ற வாகனங்கள் மீது விழுந்தன. இந்த பயங்கர விபத்தினால் நான்கு பேர் உயிரிழந்தனர் மற்றும் மூன்று பேர் பலத்த காயமடைந்தனர்.
இதைத்தொடர்ந்து இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் விரைந்து மீட்பு பணியில் ஈடுபட்டு காயமடைந்தவர்களை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்நிலையில் இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு மகாராஷ்டிரா துணை முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் இரங்கல் தெரிவித்துள்ளார். இதைத்தொடர்ந்து இந்த விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
முதற்கட்ட விசாரணையில், இந்த விபத்தில் டேங்கர் லாரியில் பயணித்த ஒருவர் மற்றும் அருகே சென்ற வாகனங்களில் பயணித்த மூன்று பேர் என மொத்தம் நான்கு பேர் சம்பவ இடத்திலேயே இறந்தனர் என்பது தெரியவந்தது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்