ஆலப்புழா கொண்டு செல்லப்பட்ட அச்சுதானந்தன் உடல்.., இறுதி அஞ்சலிக்காக வழிநெடுக திரண்ட மக்கள்.!
கேரள முன்னாள் முதலமைச்சரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான வி.எஸ். அச்சுதானந்தன் ஜூலை 21ம் தேதி காலமானார். இவருக்கு வயது 101. அவரது மறைவுக்கு பல அரசியல் தலைவர்கள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

அவரது மறைவையொட்டி, கேரளாவில் பல இடங்களில் இரங்கல் கூட்டங்கள் மற்றும் அஞ்சலி நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன. அவரது உடல் திருவனந்தபுரத்தில் உள்ள ஏகேஜி சென்டர் மற்றும் தர்பார் ஹாலில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. திருவனந்தபுரத்தில் இருந்து அவரது சொந்த ஊரான ஆலப்புழாவுக்கு எடுத்துச் செல்லப்பட்டது.

அவருக்கு அஞ்சலி செலுத்த வழிநெடுக மக்கள் பெருமளவில் திரண்டதால் முதல் 30 கிலோமீட்டரைக் கடக்கவே 8 மணிநேரத்திற்கு மேல் ஆகியுள்ளது. இப்பொழுது, ஆலப்புழாவுக்கு கொண்டு செல்லப்பட்டு, அவரது இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இறுதி ஊர்வலம் இன்று மாலை ஆலப்புழாவில் தொடங்கி, முழு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்குகள் நடைபெற உள்ளன.
இன்று மாலை ஆலப்புழாவில் முழு அரசு மரியாதையுடன் நடைபெற உள்ளன. அச்சுதானந்தனின் விருப்பப்படி, அவரது உடல் ஆலப்புழா மருத்துவக் கல்லூரிக்கு உடல் தானம் செய்யப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!
