ரசிகரை தள்ளிவிட்ட நடிகர் சிரஞ்சீவி.. வீடியோ வைரலானதால் வலுக்கும் கண்டனங்கள்!

 
சிரஞ்சீவி

உலகின் மிகப்பெரிய விளையாட்டு விழாவாகக் கருதப்படும் ஒலிம்பிக் போட்டிகள் பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் ஜூலை 26ஆம் தேதி கோலாகலமாகத் தொடங்கியது. இப்போட்டியில் 206 நாடுகளைச் சேர்ந்த 10,714 வீரர்கள் பங்கேற்று திறமையை நிரூபித்து வருகின்றனர்.இந்தியா சார்பில் 117 வீரர்கள் பங்கேற்றுள்ளனர். இதில், தமிழகத்தைச் சேர்ந்த 13 பேர் இடம் பெற்றுள்ளனர்.


இந்நிலையில், இந்தப் போட்டியின் தொடக்க விழாவில் கலந்து கொள்வதற்காக தெலுங்கு திரையுலகின் சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவியும் தனது மனைவி சுரேகாவுடன் பாரீஸ் சென்றிருந்தார். பின்னர், நாடு திரும்பினார். அப்போது அவரது ரசிகர் ஒருவர் (விமான நிறுவன ஊழியர்) விமான நிலையத்தில் சிரஞ்சீவியுடன் செல்ஃபி எடுக்க விரும்பினார். அதற்காக அவர் அருகில் சென்று செல்ஃபி எடுக்க முயற்சித்தார். ஆனால் சிரஞ்சீவி ஏதோ சொல்லி தள்ளி விடுகிறார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும், இந்த வீடியோவுக்கு எதிராக கருத்துகளும் பதிவிடப்பட்டு வருகின்றன.


முன்னதாக, கடந்த ஜூன் மாத இறுதியில், முன்னணி தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவை ஒரு ரசிகர் விமான நிலையத்திற்குள் சந்திக்க முயன்றார். ஆனால் நாகார்ஜுனாவின் பாதுகாவலர் அந்த நபரை பிடித்து தள்ளிவிட்டார். இதை கண்டுகொள்ளாமல் நடிகர் நாகார்ஜுனா வெளியேறிவிட்டதாக சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் எழுந்தன. பின்னர், வீடியோ வைரலானதை அறிந்ததும், நாகார்ஜுனா தனது எக்ஸ் தளத்தில் நடந்த சம்பவத்திற்கு மன்னிப்பு கேட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web