திருச்செந்தூரில் நடிகர் சிவகார்த்திகேயன் சுவாமி தரிசனம்!
இன்று காலை நடிகர் சிவகார்த்திகேயன் திருச்செந்தூர் முருகன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார். நடிகர் சிவகார்த்திகேயனின் வரவையடுத்து ரசிகர்கள் குவிந்ததில் அங்கே சிறிது பரபரப்பு ஏற்பட்டது.
"யப்பா.. நல்லாருக்கியா.." கோவில் கூட்டத்திலும் ரசிகரை கண்டுபிடித்த நடிகர் சிவகார்த்திகேயன்#sivakarthikeyan #tiruchendur pic.twitter.com/lXoWBTDz0E
— Thanthi TV (@ThanthiTV) July 15, 2024
நடிகர் சிவகார்த்திகேயன் ஆனி வருஷாபிஷேகத்தை ஒட்டி இன்று திருச்செந்தூர் முருகன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்திருக்கிறார். ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் படத்தின் படப்பிடிப்பு தற்போது தூத்துக்குடியில் நடந்து வருகிறது.

இந்நிலையில், இன்று படப்பிடிப்பிற்கு இடையில், திருச்செந்தூர் முருகன் கோயிலில் ஆனி வருஷாபிஷேகத்தை ஒட்டி சிறப்பு பூஜைகள் நடந்தது. இதில் சிவகார்த்திகேயன் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தார்.
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!
