நடிகர் சூர்யாவின் மைத்துனர்... ஞானவேல் ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி!

 
சூர்யா
பிரபல நடிகர் சூர்யாவின், உறவினரும், தயாரிப்பாளருமான ஞானவேல் ராஜா ஏற்கெனவே அமீரின் பருத்தி வீரன் பட பஞ்சாயத்துகளில் சிக்கி சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த நிலையில், தற்போது அடுத்த சர்ச்சை கிளம்பியிருக்கிறது. அவரது வீட்டில் வேலை செய்து வந்த பணிப்பெண் லட்சுமி நேற்று திடீரென தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளது கோலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அரளி விதை
கடந்த மாதம் 14ம் தேதி இவரது வீட்டில் தங்க நகைகள் திருடு போனதாக புகாரளிக்கப்பட்டுள்ள நிலையில், வழக்குப்பதிவு செய்த போலீசார், ஞானவேல் ராஜா வீட்டுப் பணிப்பெண் லட்சுமியிடம் விசாரணை நடத்தினார்கள்.  இதனையடுத்து, விசாரணைக்கு இன்று மீண்டும் ஆஜராக லட்சுமிக்கு சம்மன் அனுப்பப்பட்டு இருக்கிறது. காவல்துறையின் அடுத்தடுத்த விசாரணை காரணமாக லட்சுமி மன உளைச்சலில் இருந்துள்ளார். 

ஆம்புலன்ஸ்
இதனால், இன்று அவர் வீட்டில் அரளி விதையை அரைத்துக் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். லட்சுமியை மீட்ட அவரது உறவினர்கள் சென்னை, இராயப்பேட்டையில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு லட்சுமிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web