நடிகர் எஸ்.வி.சேகருக்கு 1 மாதம் சிறைத்தண்டனை.... ரூ.15,000 அபராதம்... நீதிமன்றம் தீர்ப்பு!
நடிகர் எஸ்.வி.சேகருக்கு ஒரு மாத சிறைத்தண்டனையையும், ரூ.15,000 அபராத தொகையையும் உறுதி செய்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கடந்த 2018ல் பெண் பத்திரிக்கையாளர் குறித்து சர்ச்சைக்குரிய முறையில் தனது முகநூல் பக்கத்தில் கருத்து பதிவிட்டிருந்தார் நடிகர் எஸ்.வி.சேகர்.
இது தொடர்பாக தமிழ்நாடு பத்திரிக்கையாளர் பாதுகாப்பு சங்கத்தின் செயலாளர் மிதார் மொய்தீன் காவல்துறையில் புகார் கொடுத்திருந்ததன் அடிப்படையில், நடிகர் எஸ்.வி.சேகர் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த வழக்கை விசாரித்த சிறப்பு நீதிமன்றம் நடிகர் எஸ்.வி.சேகருக்கு ஒரு மாதம் சிறைத்தண்டனையும் ரூ.15,000 அபராதமும் விதித்து தீர்ப்பளித்தது.
சிறப்பு நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை எதிர்த்து நடிகர் எஸ்.வி.சேகர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்நிலையில் நடிகர் எஸ்.வி.சேகரின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம் சிறப்பு நீதிமன்றம் அளித்த தீர்ப்பை உறுதி செய்தது.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!