சென்னையில் அதிர்ச்சி... வீடு புகுந்து கத்திமுனையில் நடிகை பலாத்காரம்... கார் டிரைவர் உள்பட 6 பேர் கைது!

 
பாலியல் துன்புறுத்தல்

சென்னை வளசரவாக்கத்தில் வீடு புகுந்து துணை நடிகையை பாலியல் பலாத்காரம் செய்ததாக நடிகரின் கார் டிரைவர் உள்பட 6 பேரை போலீசார் கைது செய்தனர்.

தெலுங்கானா மாநிலம், ஐதராபாத்தை சேர்ந்த 30 வயதான பெண் ஒருவர், தொலைக்காட்சி தொடர்களில் துணை நடிகையாக நடித்து வருகிறார். கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சென்னை வளசரவாக்கத்தில் உள்ள உறவினர் வீட்டில் தங்கி இருந்தார், இந்த நிலையில் அவரது உறவினர், வேலை விஷயமாக ஐதராபாத் சென்று விட்டார். 

பாலியல் வன்கொடுமை

இதனால் வீட்டில் துணை நடிகை மட்டும் தனியாக இருந்தார். நேற்று முன்தினம் இரவு அவரது வீட்டுக்குள் 6 பேர் புகுந்தனர். அதில் முருகேசன் என்பவர் வெளியில் 2 பேரை காவலுக்கு நிற்க வைத்துவிட்டு துணை நடிகையை வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இதுபற்றி வளசரவாக்கம் காவல் நிலையத்தில் துணை நடிகை புகார் செய்தார். 

பாலியல் செக்ஸ் பலாத்காரம் கற்பழிப்பு பெண்

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். பின்னர் சம்பவம் தொடர்பாக முருகேசன் (27), கல்யாணகுமார் (28), அருண்பாண்டி (23), மாரியப்பன் (23), பெரிய நம்பி ராஜ் (27), முப்பிடாதி (26) ஆகிய 6 பேரை கைது செய்து மேலும் விசாரித்து வருகின்றனர்.இவர்களில் கைதான முருகேசன், திரைப்பட நடிகர் ஒருவரிடம் கார் டிரைவராக வேலை செய்து வருவதாக போலீசார் தெரிவித்தனர். 

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web