இன்று அக்னிவீர் திட்டத்துக்கு ஆள்சேர்ப்பு முகாம்!

 
அக்னிவீர்

 இந்தியா முழுவதும் இளைஞர்களை முப்படைகளில் சேர்க்க அக்னிவீர் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் கோவையில் உள்ள நேரு மைதானத்தில் அக்னிவீர் ராணுவத்திற்கான ஆள்சேர்ப்பு முகாம் ஆகஸ்ட் 1 ம் தேதி  இன்று வியாழக்கிழமை முதல்  ஆகஸ்ட் 5ம் தேதி வரை நடைபெற உள்ளது.
அக்னிவீர்

இதில் நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, சேலம், தர்மபுரி, நாமக்கல், திண்டுக்கல், மதுரை, தேனி, திருப்பூர் மற்றும் கோவை ஆகிய 11 மாவட்டங்களை சேர்ந்த விண்ணப்பதாரர்கள் முகாமில் கலந்து கொள்ளலாம். இதற்கான அனுமதி சீட்டை கொண்டு வருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.இத்திட்டத்தின் மூலம் பெண்கள் ஆண்கள் ஆகிய இரு பாலினரும் சேர முடியும் அக்னி வீர் திட்டத்தின் மூலம் சேரும் வீரர்களுக்கு முதல் வருடம் மாதம் ரூ30,000 சம்பளமாக வழங்கப்படும்.
அக்னிவீர்

ஆனால் அக்னிவீர் திட்டத்தில் சேர்ந்தவர்களுக்கு  பென்ஷன் கிடையாது. அதே நேரத்தில்  தனிப்பட்ட இன்சூரன்ஸ் மற்றும் மெடிக்கல் இன்சூரன்ஸ் வழங்கப்படும். மேலும் இந்த 4  வருட பணிபுரியும் காலகட்டத்தில்  போர்க்களத்தில் சண்டையில் காயங்கள் ஏற்பட்டாலோ காயத்தை பொறுத்து ரூ44 லட்சம்  வரை நிவாரணம் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!