அதிமுக பிரமுகர் வெட்டிப் படுகொலை... தொண்டர்கள் அதிர்ச்சி!

 
சண்முகம்

 சேலம் மாவட்டம் கொண்டாலம்பட்டி  மாரியம்மன் கோயில் 4வது தெருவில் வசித்து வருபவர் 54 வயது சண்முகம். அதிமுக பிரமுகராக இருந்து வரும் இவர் அப்பகுதியில் ரியல் எஸ்டேட் தொழிலும் நடத்தி வந்தார். வழக்கம் போல் நேற்று இரவு அம்பாள் ஏரி ரோடு பகுதியில் உள்ள தனது அலுவலகத்தில் இருந்து பைக்கில்  வீடு திரும்பி கொண்டு இருந்தார்.  

அடித்தே கொலை


சஞ்சீவிராயன்பேட்டை மாரியம்மன் கோயில் தெரு அருகில் வந்து கொண்டு இருக்கையில் ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் மர்ம நபர்கள் சிலர் சண்முகத்தை வழிமறித்தனர். அவர் பைக்கை நிறுத்திவிட்டு சுதாரிப்பதற்குள் அரிவாள் உட்பட  கூரிய ஆயுதங்களால் அவரை கொடூரமாக தாக்கத் தொடங்கினர்.  இந்த கொடூரத் தாக்குதலில்  படுகாயமுற்ற சண்முகம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

ஆம்புலன்ஸ்
உயிரிழந்த சண்முகம் 2011 முதல் 2016 வரையில் கொண்டாலம்பட்டி மண்டல தலைவராக பொறுப்பில் இருந்தார். இது குறித்து தகவல் அறிந்ததும் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த  காவல்துறையினர் , சண்முகம் குடும்பத்தினர், அதிமுகவினர்  குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என கோரிக்கை முன்வைத்தனர். சண்முகம் ஆதரவாளர்கள் உடலை அங்கிருந்து அகற்ற மறுப்பு தெரிவித்தனர். அவர்களுடன்  பேச்சுவார்த்தை நடத்தி சண்முகத்தின் உடலை அங்கிருந்து அகற்றி சேலம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.  கொலையாளிகளை பிடிக்க விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web