அதிமுக எம்.எல்.ஏக்கள் குண்டுக்கட்டாக வெளியேற்றம்... சட்டசபையில் அமளி!
கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் ஜூன்18ம் தேதி விஷ சாராயத்தை வாங்கி குடித்த பலருக்கு நள்ளிரவில் இருந்து கண் எரிச்சல், வயிற்றுவலி அடுத்தடுத்து ஏற்பட்டன. இதனால் பாதிக்கப்பட்டவர்கள் புதுச்சேரி, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், சேலம் பகுதிகளில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பலி எண்ணிக்கை படிப்படியாக உயர்ந்து 50 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 100க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஆர்.பி.உதயக்குமாரை அலேக்காக தூக்கி வந்து சட்டப்பேரவையில் இருந்து வெளியேற்றிய பாதுகாவலர்கள்.. உடனே ஆவேசமாக கொந்தளித்த அதிமுகவினர்.. உச்சக்கட்ட பரபரப்பில் தலைமைச்செயலக வளாகம்...!#Chennai | #ADMK | #TNAssembly | #DuraiMurugan | #AssemblySession | #Speaker | #EPS |… pic.twitter.com/CuMBAY7ZON
— Polimer News (@polimernews) June 21, 2024
இந்நிலையில், கள்ளக்குறிச்சியில் விஷச்சாராய உயிரிழப்பு குறித்து சட்டசபையில் விவாதிக்க அதிமுக, பாஜக உட்பட கட்சிகள் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்துள்ளன. மது விலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு வந்து விவாதிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழ்நாடு முழுவதும் விஷ சாராய விற்பனையை தடை செய்வது குறித்து விவாதிக்கவும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சட்டசபை தொடங்கிய நிலையில் விஷச்சாராய உயிரிழப்புக்கு கண்டனம் தெரிவித்து அதிமுக, பாஜக, பாமக உள்ளிட்ட கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டுள்ளன.தொடர்ந்து அமளியில் ஈடுபட்ட அதிமுக எம்.எல்.ஏ.க்களை வெளியேற்ற சபாநாயகர் அப்பாவு உத்தரவிட்டார். அதன்படி அதிமுக எம்.எல்.ஏ.க்கள் குண்டு கட்டாக வெளியேற்றப்பட்டனர்.
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!
