தஞ்சையில் 8ம் தேதி அதிமுக ஆர்ப்பாட்டம்... எடப்பாடி அறிவிப்பு!

 
இபிஎஸ்

தஞ்சாவூரில் சுகாதார சீர்கேடுகளை கண்டித்து வரும் ஜனவரி 8ம் தேதி அதிமுக ரயிலடி தபால் நிலையம் அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த இருப்பதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 

அதிமுக

இது குறித்து அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “தஞ்சாவூர் மாநகராட்சியில் நிலவி வரும் நிர்வாகச் சீர்கேடுகள், சுகாதார சீர்கேடுகள், பல்வேறு வகை வரி உயர்வு, ஆதாய நோக்கத்துடன் நடைபெறும் முறைகேடுகள் மற்றும் கழக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்களை மடை மாற்றம் செய்து ஸ்டிக்கர் ஒட்டுதல் முதலான மக்கள் விரோதச் செயல்களை கண்டும் காணாமல் இருந்து வரும் தி.மு.க. அரசு மற்றும் மாநகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து அதிமுக தஞ்சாவூர் மாநகரக் கழகத்தின் சார்பில் வருகிற 8ம் தேதி காலை 10 மணியளவில் ரயிலடி தபால் நிலையம் அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

எடப்பாடி பொதுக்குழு அதிமுக

இந்தக் கண்டன ஆர்ப்பாட்டம் அதிமுக அமைப்புச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான செ.செம்மலை தலைமையிலும், தஞ்சாவூர் மத்திய மாவட்டக் கழகச் செயலாளர் ஆ.சேகர், தஞ்சாவூர் மாநகரக் கழகச் செயலாளர் சரவணன் ஆகியோர் முன்னிலையிலும் நடைபெறும்” என்று கூறியுள்ளார்.

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

From around the web