ஐப்பசி பவுர்ணமி ... அன்னாபிஷேகம்... கிரிவலம்... தஞ்சையிலும், திருவண்ணாமலையிலும் குவிந்த பக்தர்கள்!

 
நாளை சிவ ஆலயங்களில் அன்னாபிஷேகம்!?

தமிழகம் முழுவதும் சிவன் கோவில்கள் நேற்றில் இருந்தே அலங்காரத்தினாலும், அபிஷேகத்தினாலும் களைகட்ட துவங்கின. நேற்று ஐப்பசி மாத பெளர்ணமி தினத்தை முன்னிட்டு விருதுநகர்  மாவட்டம் சதுரகிரியிலும், திருவண்ணாமலையிலும் கிரிவலம் செல்வதற்காக பக்தர்கள் குவிந்தனர். அதே போன்று ஐப்பசி மாத பெளர்ணமி தினத்தையொட்டி அனைத்து சிவன் கோவில்களிலும் அன்னாபிஷேகம் நடத்தப்பட்டது. இந்த அன்னாபிஷேகத்தைக் காண்பதற்காகவும் தஞ்சை பெரிய கோவிலும் பக்தர்கள் குழுமியுள்ளனர். டன் கணக்கில் காய்கறிகளாலும், அன்னத்தாலும் சிவனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. 

ஒவ்வொரு மாத பெளர்ணமி தினத்தன்றும் கிரிவலம் செல்ல தமிழகம் முழுவதுமிருந்தும் பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வந்து குவிகின்றனர். இந்நிலையில், ஐப்பசி  மாத பெளர்ணமி அன்னாபிஷேகம் சிறப்பு வாய்ந்தது என்பதால், நேற்று அதிகாலை முதலே பக்தர்கள் திருவண்ணாமலையில் குவிந்தனர். 

திருவண்ணாமலை தீபம்

அதே போன்று, தஞ்சை பெரிய கோவிலிலும், அன்னாபிஷேக தரிசனத்திற்காக பக்தர்கள் குவிந்தனர். நேற்று நள்ளிரவு துவங்கி, இந்த ஆண்டின் கடைசி சந்திரகிரணத்தை முன்னிட்டு ஆலயங்களில் நடை வேகமாக சாத்தப்பட்டது. 

ஐப்பசி மாத பௌர்ணமி இன்று அக்டோபர் 29ம் தேதி ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 2.27 மணிக்கு நிறைவடைந்ததால், நேற்று காலை முதலே பலரும் கிரிவலம் செல்வதற்காக குவிந்தனர். 

இன்று முதல் சதுரகிரி மலையேற அனுமதி! CONDITIONS APPLY!

திருவண்ணாமலை, தஞ்சாவூர் மட்டுமல்லாது சதுரகிரி மலையேறவும் பக்தர்கள் அதிகளவில் குவிந்தனர். ஐப்பசி மாதத்தில் சிவ தரிசனம் மேன்மை தரும் என்பதால், ராமேஸ்வரத்திலும் பக்தர்கள் அதிகளவில் தரிசனத்திற்காக வந்திருந்தனர்.

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

ஐப்பசி மாதத்தில் இந்த பிரார்த்தனையை மிஸ் பண்ணீடாதீங்க!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

கிடுகிடுவென உடல் எடை குறைய தினம் இந்த பழம் சாப்பிட்டு பாருங்க...!!

ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் ஐப்பசி மாத பண்டிகைகள், சிறப்புக்கள்!!

From around the web