திருத்தணி முருகன் கோவிலில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சாமி தரிசனம்!
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக அறியப்படும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகள். 3 படம் மூலம் இயக்குநராக அறிமுகமான அவர், தனுஷ் நடித்த அந்த படம் பெரிய வரவேற்பைப் பெற்றது. பின்னர் வை ராஜா வை மற்றும் சமீபத்தில் லால் சலாம் படங்களையும் இயக்கினார். லால் சலாம் படத்தில் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடித்தது கூடுதல் கவனத்தை பெற்றது.

இந்நிலையில், ஐஸ்வர்யா தற்போது தனது புதிய படத்திற்கான பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். புதிய பட குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என படவட்டாரங்கள் கூறுகின்றன. இதற்கிடையில், அவர் திருத்தணியில் உள்ள முருகனின் ஐந்தாம் படை வீடாகிய திருத்தணி கோவிலுக்கு சென்று தரிசனம் செய்தார்.

கோவில் தரிசனத்துடன், நேற்று இரவு நடைபெற்ற பள்ளியறை பூஜையிலும் ஐஸ்வர்யா கலந்து கொண்டு பிரார்த்தனை செய்தார். தனது புதிய பட முயற்சிகள் சிறப்பாக அமைய வேண்டி அவர் வழிபாடு செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை
ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க
