உஷார்... நடுரோட்டில் பைக்கை மடக்கி 8 பேர் கொண்ட கும்பல் ரூ.33 லட்சம் வழிப்பறி!

 
நாங்குநேரி

நடுரோட்டில், பைக்கை வழிமறித்து, மர்ம நபர்கள் ரூ.33 லட்சம் கொள்ளையடித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். 

திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி அருகே வாகைகுளம் பகுதியில் 33 லட்சம் ரூபாய் பணத்துடன் பைக்கில் சென்ற முருகன், வானமாமலை ஆகியோரை 8 பேர் கொண்ட கும்பல் வழிமறித்தது. பின்னர் அவர்களை அரிவாளை காட்டி மிரட்டி பணத்தை கொள்ளையடித்து சென்றனர். இந்நிலையில் கொள்ளை குறித்து அவர்கள் நாங்குநேரி காவல்துறையினரிடம் புகார் அளித்தனர்.

புகாரின் பேரில் போலீசார் உடனடியாக தனிப்படை அமைத்து தீவிர விசாரணை நடத்தினார். இந்த விசாரணையின் அடிப்படையில் வாகைகுளம் பகுதியை சேர்ந்த செல்வகுமார் உள்ளிட்ட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

இளம் நடிகர் கைது

அவர்களிடம் இருந்து 27 லட்சம் ரூபாய் வரை பணத்தை பறிமுதல் செய்த போலீசார், தலைமறைவாக உள்ள 5 பேரை தேடி வருகின்றனர். அதேநேரம் தேர்தல் நேரத்தில் இருவர் சுமார் 33 லட்சம் ரூபாயுடன் பைக்கில் சென்றது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தமிழ் புத்தாண்டில் பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

From around the web