உஷார்.. மசாஜ் சென்டரில் HIDDEN CAMERA.. ஷாக்கான இளம்பெண்.. இளைஞருக்கு அடி, உதை!

 
குளிப்பதை வீடியோ எடுத்தவர் கைது

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் பகுதியில் ஆயுர்வேத மற்றும் சித்த சிகிச்சை மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு ஆண்கள் மற்றும் பெண்களுக்கு மசாஜ் சிகிச்சை அளிக்கப்படுகிறது. அங்கு ஒரு பெண் மசாஜ் செய்ய வந்தாள். அவருக்கு அங்கு பணிபுரியும் பெண் ஒருவர் மசாஜ் செய்தார். அறையில் இருந்த வென்டிலேட்டர் மூலம் பொருத்தப்பட்ட கேமராவில்  வீடியோ பதிவானதை பார்த்த பெண் அதிர்ச்சியில் அலறினார். இதுகுறித்து, அவர் தனது உறவினர்களுக்கும், வடசேரி போலீசாருக்கும் தகவல் கொடுத்தார். போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

மசாஜ் ஸ்பா

ஆயுர்வேத சிகிச்சை மையத்தில் பணியாற்றிய இளைஞரிடம் விசாரணை நடத்தினர். பின்னர் அவரது செல்போனை ஆய்வு செய்தபோது அந்த பெண்ணின் வீடியோ காட்சிகள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அந்த பெண்ணின் உறவினர்கள் போலீசார் முன்னிலையிலேயே அவரை தாக்கினர். இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். அப்போது அவர் மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்தவர் என்பது தெரியவந்தது.

இவர் கடந்த 2 ஆண்டுகளாக ஆயுர்வேத சிகிச்சை மையத்தில் பணியாற்றி வருகிறார். இதையடுத்து அவரிடம் இருந்த 2 செல்போன்கள், லேப்டாப் ஆகியவற்றை போலீசார் கைப்பற்றி ஆய்வு செய்தனர். அவரது லேப்டாப்பில் மேலும் சில பெண்களின் வீடியோ கிளிப்புகள் இருந்தன. அந்த வீடியோ காட்சிகள் ஆயுர்வேத சிகிச்சை மையங்களா? வேறு ஏதேனும் பெண்கள் வீடியோக்கள் உள்ளதா? போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி! 

From around the web