மும்பை குண்டுவெடிப்பில் மரணதண்டனை விதிக்கப்பட்ட 5 பேர் உட்பட 12 பேரும் விடுதலை.!

 
மும்பை தொடர் குண்டுவெடிப்பு


 
2006 மும்பை ரயில் குண்டுவெடிப்பு வழக்கில் 12 பேர் மீதான தண்டனையை மும்பை உயர் நீதிமன்றம்   ரத்து செய்துள்ளது. மும்பையின் மேற்கு ரயில்வே வலையமைப்பை உலுக்கிய பயங்கரவாத தாக்குதலுக்கு 19 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
ஜூலை 11, 2006 ம் தேதி  மும்பையின் மேற்கு ரயில்வே புறநகர் ரயில் பாதையில் ஏழு குண்டுவெடிப்புகள் நிகழ்ந்தன. இதில் 189 பேர் உயிரிழந்தனர் மற்றும் 800-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

இந்த வழக்கில், 2015ம் ஆண்டு மகாராஷ்டிரா ஒழுங்கமைக்கப்பட்ட குற்றத்தை கட்டுப்படுத்தும் சட்டத்தின்  கீழ் ஒரு சிறப்பு நீதிமன்றம் 12 பேரை குற்றவாளிகளாக அறிவித்து, ஐவருக்கு மரண தண்டனையும், ஏழு பேருக்கு ஆயுள் தண்டனையும் விதித்தது.இன்றைய தினம் ஜூலை 21ம் தேதி பம்பாய் உயர் நீதிமன்றத்தின் நீதிபதிகள் அனில் கிலோர் மற்றும் ஷ்யாம் சந்தக் அடங்கிய அமர்வு, வழக்கை மறு ஆய்வு செய்து, தீவிர விசாரணையில் பல குறைபாடுகள் இருப்பதாகக் கூறி, அனைத்து 12 குற்றவாளிகளையும் விடுதலை செய்தது.நீதிமன்றம் தரப்பு ‘குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிரான வழக்கை நிரூபிக்க அரசு தரப்பு முற்றிலும் தவறிவிட்டது’.  எனக் கூறியது.


இந்நிலையில், இந்த தீர்ப்பு இந்தியாவின் மிக மோசமான பயங்கரவாத தாக்குதல்களில் தீவிர விசாரணையில் புலனாய்வு மற்றும் வழக்கு நடவடிக்கைகளில் இருந்த குறைபாடுகளை வெளிப்படுத்தியுள்ளது.  இந்த தாக்குதலுக்கு உண்மையான குற்றவாளிகள் யார் என்பது இன்னும் தெளிவாகவில்லை,  

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?