குற்றாலம் மெயின் அருவியில் குளிக்க அனுமதி... சுற்றுலாப் பயணிகள் உற்சாகம்!
![குற்றாலம்](https://www.dinamaalai.com/static/c1e/client/93068/uploaded_original/10333cc839a808bee77f9986cc518bb6.webp)
தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் தற்போது சீசன் தொடங்கியுள்ளது. இங்குள்ள குற்றால அருவிகளில் குளித்து மகிழ பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் வருகை தந்த வண்ணம் உள்ளனர். மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் பெய்த தொடர் மழையின் காரணமாக குற்றால அருவிகளில் நீர்வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் குற்றாலம் மெயின் அருவியில் ஜூன் 8ம் தேதி ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு காரணமாக சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி குளிக்க தடை விதிக்கப்பட்டது.
அந்த தடையானது நேற்று முழுவதும் நீடித்தது. இன்று காலை அருவியில் நீர்வரத்து கணிசமாக குறைந்ததை தொடர்ந்து சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறை மற்றும் காவல்துறை அனுமதி அளித்துள்ளனர். தற்போது கோடை விடுமுறை முடிவுக்கு வந்துள்ள நிலையில் சுற்றுலா பயணிகள் கூட்டம் வெகுவாக குறையத் தொடங்கியுள்ளது. இந்நிலையில் மெயின் அருவி பகுதியில் சுற்றுலா பயணிகள் உற்சாகக் குளியல் போட்டு வருகின்றனர்.
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!