”நா கூசவில்லையா? மு.க.ஸ்டாலின் பேச்சில் கொஞ்சம் கூட குற்ற உணர்ச்சி இல்லை... எடப்பாடி பழனிசாமி ஆவேசம்!

முதல்வர் மு.க. ஸ்டாலினின் பேச்சில் கொஞ்சம் கூட குற்ற உணர்ச்சி இல்லை என்று எதிர்கட்சி தலைவரும், அதிமுக பொதுசெயலாளருமான எடப்பாடி பழனிசாமி ஆவேசமாக சாடியுள்ளார். இது குறித்து பதிவிட்டுள்ள அவர், ”உங்கள் ஆசை வார்த்தைக்கு தமிழ்நாட்டு மக்கள் இதுவரை ஏமாந்தது போதாதா?” என்று கேள்வியெழுப்பி உள்ளார்.
முன்னதாக போலீசார் விசாரணையின் போது மரணம் அடைந்த திருப்புவனம் இளைஞர் அஜித்குமாரின் தாயார் மற்றும் சகோதரருடன் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசினார். அப்போது இளைஞர் மரணம் அடைந்தது தொடர்பாக ஆறுதல் கூறிய முதலமைச்சர், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார்.
இந்நிலையில், முதலமைச்சரின் உரையாடல் அலட்சியத்தின் உச்சம் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சாடியுள்ளார். இது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், அதில், “முதல் அமைச்சர் முக ஸ்டாலினின் தொலைபேசி உரையாடல்- அலட்சியத்தின் உச்சம். கொலை செய்தது உங்கள் அரசு. சாரி என்பது தான் உங்கள் பதிலா?
அஜித்குமார் இருந்ததால் தான் அந்த குடும்பம் தைரியமாக இருந்தது. அவர்கள் தைரியத்தை கொலை செய்து விட்டு, "தைரியமாக இருங்கள்" என்று சொல்வதற்கு என்ன தைரியம் இருக்க வேண்டும் இந்த பொம்மை முதல்வருக்கு?
முதல்வரின் பேச்சில் கொஞ்சம் கூட குற்ற உணர்ச்சியே இல்லையே? "என்ன பண்ணணுமோ பண்ணி கொடுக்க சொல்றேன்" என்று சொல்கிறீர்களே. போன அப்பாவி அஜித்குமாரின் உயிரை திருப்பி கொடுக்க முடியுமா ?
வேறென்ன செய்துவிடப் போகிறீர்கள்? கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்களின் போது, உறவினர்களை அஞ்சலி செலுத்தக் கூட விடாமல், காசைக் கொடுத்து அவர்களின் குரலை ஒடுக்கலாம் என்று முயன்றீர்களே.. அதை போன்ற முயற்சி தானே இதுவும்?
அஜித்குமார் இறந்து நான்கு நாட்கள் கழித்து, எதிர்க்கட்சியான அதிமுக சார்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு ,அதன் அடிப்படையில் நீதிமன்றம் விசாரித்து, கடுமையான விமர்சனங்களை வைத்த பிறகு எப்.ஐ.ஆர்., கைது எல்லாம் நடக்கிறது.
உங்கள் ஆசை வார்த்தைக்கு தமிழ்நாட்டு மக்கள் இது வரை ஏமாந்தது போதாதா? அஜித்குமார் குடும்பமும் ஏமாற வேண்டுமா?"நடக்கக் கூடாதது நடந்துடுச்சு" என்று சொல்ல நா கூசவில்லையா உங்களுக்கு? இது என்ன உங்கள் ஆட்சியில் முதல் முறை நடந்திருக்கிறதா? இது 25வது முறை! இந்த அரசு எப்படிப்பட்ட நடவடிக்கை எடுக்கும் என்பதற்கு இந்த அலட்சிய போட்டோஷூட் போன் காலே சாட்சி!" என்று பதிவிட்டுள்ளார்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!