நடிகர் பிரகாஷ் ராஜூக்கு ‘அம்பேத்கர் சுடர் விருது’ அறிவிப்பு!

 
நடிகர் சங்க தேர்தலில் பிரகாஷ்ராஜ்! தலைவர் பதவிக்கு களம் இறங்குகிறார்!
 நடிகர் பிரகாஷ்ராஜ்க்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி 2024ம் ஆண்டுக்கான 'அம்பேத்கர் சுடர் விருது' வழங்கப்படுவதாக அறிவித்துள்ளது. சமூகம், அரசியல், பண்பாடு, கலை-இலக்கியம் போன்ற தளங்களில் சிறந்த முறையில் பணியாற்றுபவர்களுக்கு கடந்த 2007ம் ஆண்டு முதல் அம்பேத்கர் சுடர், பெரியார் ஒளி, காமராசர் கதிர், அயோத்திதாசர் ஆதவன், காயிதேமில்லத் பிறை மற்றும் செம்மொழி, ஞாயிறு ஆகிய விருதுகள் வழங்கப்படுகின்றன. 


இந்நிலையில், 2024 ஆம் ஆண்டுக்கான விருது பட்டியலை விசிக வெளியிட்டுள்ளது. அதில், அம்பேத்கர் சுடர் விருதுக்கு, திரைப்பட நடிகர் பிரகாஷ்ராஜ் தேர்வாகியுள்ளார். மதச்சார்பின்மைக்காக சமரசமில்லாமல் போராடி வருவதால், இந்த விருதுக்கு பிரகாஷ்ராஜ் தேர்ந்தெடுக்கப்பட்டதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தெரிவித்துள்ளது.
மேலும், பெரியார் ஒளி விருத்கு, திராவிடர் கழக பிரச்சார செயலாளர் வழக்கறிஞர் அருள்மொழி, மார்க்ஸ் மாமணி விருதுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன், காமராசர் கதிர் விருதுக்கு இந்திய சமூகநீதி இயக்கத்தின் தலைவர் பேராயர் எஸ்றா சற்குணம், அயோத்திதாசர் ஆதவன் விருதுக்கு பேராசிரியர் ராஜ்கௌதமன், காயிதேமில்லத் பிறை விருதுக்கு வெல்ஃபேர் பார்ட்டி ஆஃப் இந்தியா மாநில தலைவர் எஸ்.என். சிக்கந்தர், செம்மொழி ஞாயிறு விருதுக்கு கல்வெட்டியலறிஞர் எ.சுப்பராயலு ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!