நடிகர் பிரகாஷ் ராஜூக்கு ‘அம்பேத்கர் சுடர் விருது’ அறிவிப்பு!
2024 ஆம் ஆண்டுக்கான #விசிக_விருதுகள்:
— Thol. Thirumavalavan (@thirumaofficial) April 29, 2024
திரைநாயகர் திரு.#பிரகாஷ்ராஜ் அவர்களுக்கு 'அம்பேத்கர் சுடர் ' விருது!
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அறிவிப்பு!
------------------------------
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் தமிழகம் மற்றும் இந்திய அளவில் ஆண்டுதோறும் பல்வேறு தளங்களில்… pic.twitter.com/3Fkg4MJHM9
இந்நிலையில், 2024 ஆம் ஆண்டுக்கான விருது பட்டியலை விசிக வெளியிட்டுள்ளது. அதில், அம்பேத்கர் சுடர் விருதுக்கு, திரைப்பட நடிகர் பிரகாஷ்ராஜ் தேர்வாகியுள்ளார். மதச்சார்பின்மைக்காக சமரசமில்லாமல் போராடி வருவதால், இந்த விருதுக்கு பிரகாஷ்ராஜ் தேர்ந்தெடுக்கப்பட்டதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தெரிவித்துள்ளது.
மேலும், பெரியார் ஒளி விருத்கு, திராவிடர் கழக பிரச்சார செயலாளர் வழக்கறிஞர் அருள்மொழி, மார்க்ஸ் மாமணி விருதுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன், காமராசர் கதிர் விருதுக்கு இந்திய சமூகநீதி இயக்கத்தின் தலைவர் பேராயர் எஸ்றா சற்குணம், அயோத்திதாசர் ஆதவன் விருதுக்கு பேராசிரியர் ராஜ்கௌதமன், காயிதேமில்லத் பிறை விருதுக்கு வெல்ஃபேர் பார்ட்டி ஆஃப் இந்தியா மாநில தலைவர் எஸ்.என். சிக்கந்தர், செம்மொழி ஞாயிறு விருதுக்கு கல்வெட்டியலறிஞர் எ.சுப்பராயலு ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!
