கோர விபத்தில் சிக்கிய ஆம்புலன்ஸ்.. பரிதாபமாக பலியான நோயாளி.. 6 பேர் படுகாயம்!

 
ஆம்புலன்ஸ் விபத்து

கேரள மாநிலம் கோழிக்கோடு அருகே உள்ள உள்ளிரியேரியில் உள்ள மலபார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சுலோச்சனா (57) இன்று காலை அறுவை சிகிச்சைக்காக கோழிக்கோட்டில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அழைத்துச் செல்லப்பட்டார்.கல்லுத்தான்கடவ் அருகே ஆம்புலன்ஸ் சென்றபோது, எதிர்பாராதவிதமாக சாலையோர மின்கம்பத்தில் மோதி தீப்பிடித்தது.


ஆம்புலன்சில் இருந்த சுலோச்சனா என்ற நோயாளி உடல் கருகி பலியானார். கனமழை பெய்து வருவதால் சாலையின் தெரிவுநிலை குறைந்ததால் விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால், சுலோச்சனாவுடன் ஆம்புலன்சில் பயணம் செய்த அவரது கணவர் சந்திரன், பக்கத்து வீட்டுப் பெண் பிரசீதா, மருத்துவர், 2 நர்சிங் ஊழியர்கள், ஆம்புலன்ஸ் டிரைவர் உள்பட 6 பேர் லேசான தீக்காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

அவர்கள் அனைவரும் அங்குள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர். போலீசார் நடத்திய விசாரணையில், விபத்தில் உயிரிழந்த சுலோச்சனா நாதபுரத்தை சேர்ந்தவர் என்பதும், நடன ஆசிரியையாக பணியாற்றி வருவதும் தெரியவந்தது. விபத்து குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web