ஊஞ்சல் விளையாடிய போது கழுத்து இறுக்கி 8 வயது சிறுமி பலி... கதறிய பெற்றோர்!

 
அஸ்வந்தி
 

சென்னை வேளச்சேரி அடுத்துள்ள பெரும்பாக்கம் எழில்நகர் பகுதியில் வசித்து வருபவர் 38 வயது உதயா . இவரது  மனைவி சரண்யா. இருவரும் கூலி வேலை செய்து வருகின்றனர். இவர்களது மகள் 8வயது அஸ்வந்தி. இவர்  அந்த பகுதியில் உள்ள பள்ளியில் 3ம் வகுப்பு படித்து வந்தார்.  பள்ளி‌ விடுமுறை என்பதால், நேற்று மகளை வீட்டில் விட்டு கணவன் - மனைவி இருவரும் வேலைக்கு சென்றுவிட்டனர்.   இரவு வீட்டிற்கு வந்து பார்த்த போது, வீட்டின் கதவு உள்பக்கமாக தாழ்ப்பாள் போடப்பட்டிருந்தது.

ஆம்புலன்ஸ்


இருவரும் ஜன்னல் வழியே உள்ளே பார்த்த போது மகள் அஸ்வந்தி ஜன்னலில் கட்டி இருந்த ஊஞ்சல் கயிறு மற்றும் துண்டு கழுத்தில் சுற்றிய நிலையில் மயங்கி தொங்கி கொண்டிருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனே அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று குழந்தையை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள், சிறுமி ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து பெற்றோர் பெரும்பாக்கம் காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பெரும்பாக்கம் போலீசார், சிறுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். வீட்டில் தனியாக விளையாடி கொண்டிருந்த சிறுமி ஊஞ்சல் கயிறு கழுத்தில் இறுக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web