பிச்சை கொடுப்பவர்கள் மீது எப்ஐஆர் பதிவு செய்யப்படும்.. மாவட்ட ஆட்சியர் அதிரடி உத்தரவு!

 
பிச்சை

மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் பிச்சை எடுப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பிச்சைக்காரர்களுக்கு பிச்சை கொடுப்பவர்கள் மீது ஜனவரி 1ம் தேதி முதல் எப்ஐஆர் பதிவு செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர் ஆஷிஷ் சிங், தனது சமீபத்திய அறிவிப்பில், நகரில் பிச்சை எடுப்பதைத் தடை செய்து ஏற்கனவே உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளார்.

இந்தூரில் பிச்சை எடுப்பதற்கு எதிரான விழிப்புணர்வு பிரச்சாரம் 2024 டிசம்பர் இறுதி வரை தொடரும் என மாவட்ட ஆட்சியர் ஆஷிஷ் சிங் தெரிவித்தார். அதன்படி, ஜனவரி 1ம் தேதி முதல் பிச்சைக்காரர்களுக்கு பணம் கொடுப்பது குற்றச் செயலாக கருதப்படும். இது குறித்து மாவட்ட ஆட்சியர் ஆஷிஷ் சிங் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''பிச்சை எடுக்கும் பாவத்தில் பங்கு கொள்ளாதீர்கள்.

தொடர்ந்து பேசிய அவர், “சாலைகளில் பிச்சை எடுப்பதற்காக மக்களைச் சுரண்டும் பல கும்பல்களை இந்தூர் நிர்வாகம் ஏற்கனவே கண்டுபிடித்துள்ளது. மேலும் சில பிச்சைக்காரர்களுக்கு புதிய வாழ்வு அளிக்கப்பட்டுள்ளது” என்றார். மத்திய அரசின் இந்த திட்டத்தில் முன்னோடி நகரங்களில் ஒன்றாக இந்தூர் தேர்வு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, இந்தூரை பிச்சைக்காரர்கள் இல்லாததாக மாற்றும் முயற்சியாக, 2025 ஜனவரி 1 முதல் பிச்சை கொடுப்பவர்கள்  மீது எஃப்ஐஆர் பதிவு செய்ய நிர்வாகம் தொடங்கும் என்று மாவட்ட அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்தூரின் இந்த முயற்சியானது, நாடு முழுவதும் உள்ள 10 நகரங்களை பிச்சைக்காரர்கள் இல்லாத நகரமாக மாற்ற மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தால் தொடங்கப்பட்ட ஒரு பெரிய முயற்சியின் ஒரு பகுதியாகும். மாநில அரசுகள், உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மூலம் செயல்படுத்தப்படும் இந்தத் திட்டம், இதுபோன்ற பல சேவைகளை வழங்குகிறது.

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!