அறையை விட்டு வெளியேற்றியதால் ஆத்திரம்.. உறவினரை அடித்து கொன்ற பரோட்டா மாஸ்டர் கைது!

 
ரவிக்குமார்

ராமநாதபுரம் வசந்தநகர் பாலசுப்ரமணிய சுவாமி கோயில் கிழக்குத் தெருவைச் சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மகன் ரவிக்குமார் (வயது 34). வண்டிக்காரதெரு பகுதியில் உள்ள அச்சகத்தில் வேலை பார்த்து வந்தார். இவருக்கு பரணி என்ற மனைவியும், ஆகாஷ் (6) என்ற மகனும் உள்ளனர். கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடு காரணமாக பரணி தனது மகனை அழைத்துக் கொண்டு பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டார். இதனால் ரவிக்குமார் தனியாக வீடு எடுத்து வசித்து வந்துள்ளார்.

மதுபோதை

ரவிக்குமாரின் அக்கா கணவரின் தம்பியான ஆர்.எஸ்.மங்கலம் அருகே உள்ள சேத்தியாக்கோட்டை பகுதியைச் சேர்ந்த கணேசன் (42), ரவிக்குமார் அறையில் ஒன்றாகத் தங்கியுள்ளார். கணேசன் ராமநாதபுரத்தில் உள்ள ஓட்டல்களில் பரோட்டா மாஸ்டராக வேலை பார்த்து வந்தார். நேற்று இரவு ரவிக்குமாரும், கணேசனும் அறையில் மது அருந்திக் கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது. அப்போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது.

இதனால் ஆத்திரமடைந்த ரவிக்குமார், இனி என்னுடன் அறையில் இருக்க வேண்டாம் என்று கணேசனை அறையை விட்டு வெளியே அனுப்பிவிட்டு கணேசனின் ஆடைகளை எடுத்து வீசினார். துணிகளை எடுத்துக்கொண்டு கணேசன் அருகில் இருந்த அரச மரத்தடியில் தூங்கினார். அப்போதும் கோபம் அடங்காத ரவிக்குமார், அரச மரத்தடியில் தூங்கிக்கொண்டிருந்த கணேசனிடம் மீண்டும் தகராறில் ஈடுபட்டார். அப்போது அருகில் கிடந்த செங்கலை எடுத்து கணேசனை தாக்கியதாக தெரிகிறது. 

கொலை

இதனால் ஆத்திரமடைந்த கணேசன் ரவிக்குமார் மீது மூங்கில் கட்டை எடுத்து பலமாக தாக்கினார். இதில் ரவிக்குமார் ரத்த வெள்ளத்தில் சரிந்து பரிதாபமாக இறந்தார். உடனே கணேசன் அங்கிருந்து ஓடினார். இந்த சம்பவம் குறித்து ரவிக்குமாரின் சகோதரி ரேவதி அளித்த புகாரின் பேரில் ராமநாதபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கணேசனை கைது செய்தனர். கணேசனுக்கு விஜி என்ற மனைவியும், அனுஷ்கா (14) என்ற மகளும், கவின் (13) என்ற மகனும் உள்ளனர் என்பதுன் குறிப்பிடத்தக்கது.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!