ஆண் குழந்தை பிறக்காததால் ஆத்திரம்.. இரட்டை பெண் சிசுக்களை கொடூரமாக கொன்ற தந்தை கைது!

 
நிரஜ்

டெல்லி சுல்தான்புரியை சேர்ந்தவர் நிரஜ் சோலங்கி. இவருக்கு சில ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. தனக்கு ஆண் குழந்தை மட்டுமே பிறக்க வேண்டும் என்றும், அதன் பிறகு தான் தனது சொத்தை நிர்வகிக்க முடியும் என்றும் நிரஜ் பிடிவாதமாக இருந்தார். இதையடுத்து அவரது மனைவி பூஜா கர்ப்பமானார். இந்நிலையில் கடந்த மே 30ம் தேதி அரியானா மாநிலம் ரோடக்கில் உள்ள மருத்துவமனையில் அவருக்கு இரட்டை பெண் குழந்தைகள் பிறந்தன.

இதனால், நிரஜ் மனமுடைந்து கோபமடைந்தார். இதையடுத்து, கடந்த 3-ஆம் தேதி, கடந்த சில நாட்களுக்கு முன்பு பிறந்த இரட்டை பெண் குழந்தைகளின் சடலங்கள் புதைக்கப்பட்டுள்ளதாக காவல் நிலையத்துக்கு ஒருவர் தகவல் அளித்தார். அதன்பின், மயானத்துக்கு சென்ற போலீசார், அதிகாரிகளிடம் அனுமதி பெற்று, குழந்தைகளின் உடலை தோண்டி எடுத்து, பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் குழந்தைகளின் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இதற்கிடையில், குழந்தைகளின் உடல்கள் தோண்டி எடுக்கப்பட்டதை போலீசார் அறிந்ததும், நிரஜ் தலைமறைவானார். ஒரு மாதத்திற்கும் மேலாக தலைமறைவாக உள்ளதால், அவரது செல்போன் எண்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

கைது

இந்நிலையில், நேற்று டெல்லி, அரியானா மாநில எல்லைப் பகுதியான ரோடக் பகுதியில் பதுங்கி இருந்த நிரஜை  போலீசார் கைது செய்தனர். ஆண் குழந்தை இல்லாத விரக்தியில் இரட்டை பெண் குழந்தைகளை கொன்று புதைத்ததாக நீரஜ் வாக்குமூலம் அளித்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web