’டீ போட்டு தர மறுத்ததால் ஆத்திரம்’.. மருமகளை கழுத்தை நெரித்து கொன்ற மாமியார் கைது!

 
 அஜ்மீரா பேகம்

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள விஹாராபாத் மாவட்டம் மோமின்பேட்டையை சேர்ந்தவர் அஜ்மீரா பேகம் (28). இவருக்கும் ஆட்டோ டிரைவர் முகமது அப்பாஸுக்கும் கடந்த 2015ம் ஆண்டு திருமணம் நடந்தது.இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இவர்களுடன் அப்பாஸின் தாய் ஃபர்சானா பேகம் (53) வசித்து வந்தார்.


கடந்த 15 நாட்களாக மாமியார், மருமகள் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதனால் அவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் ஃபர்சானா பேகம் நேற்று தனது மருமகள் அஜ்மீரா பேகத்திடம் டீ போடுமாறு கூறியுள்ளார். ஆனால்,  போட முடியாது என்று அஜ்மீரா கூறினார். இதனால் இருவருக்கும் இடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டது.

இதனால் ஆத்திரமடைந்த பர்சானா, அஜ்மீரா பேகத்தின் பின்னால் சென்று துப்பட்டாவால் கழுத்தை நெரித்தார். மூச்சுத்திணறல் காரணமாக அஜ்மீரா பேகம் உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த அத்தாப்பூர் போலீசார் விரைந்து வந்து அஜ்மீரா பேகத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை தொடர்பாக ஃபர்சானா பேகம் கைது செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web