அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை... எப்.ஐ.ஆரில் அதிர்ச்சி தகவல்கள்!

 
ஞானசேகரன்


அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவர் மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், எப்.ஐ.ஆரில் அதிர்ச்சியாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 

சென்னை கிண்டியில் செயல்பட்டு வரும் அண்ணா பல்கலைக்கழகத்தில் தமிழகத்தில் இருந்து மட்டுமல்லாமல் வெளிமாநிலங்களைச் சேர்ந்த மாணவ, மாணவிகளும் படித்து வருகிறார்கள். 

கற்பழிப்பு பலாத்காரம் செக்ஸ் பாலியல் பெண்

இந்நிலையில் பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ள சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. மாணவி கொடுத்த புகாரின் பேரில், கோட்டூர்புரம் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பத்மாவதி 4 சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து குற்றவாளியை 3 தனிப்படைகள் அமைத்து வலைவீசி தேடி வந்தனர்.

இதையடுத்து கோட்டூர்புரம் மண்டபம் சாலையில் பிளாட்பாரத்தில் பிரியாணி கடை நடத்தி வந்த ஞானசேகரன் என்பவரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். மாணவி பாலியல் வழக்கில் கைதான ஞானசேகரனுக்கு ஜனவரி 8ம் தேதி வரை 15 நாட்கள் நீதிமன்ற காவல் விதித்து சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந் நிலையில், சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில் எப்.ஐ.ஆரில் மாணவி கூறிய புகார்கள் குறித்த தகவல்கள் வெளியாகி பரபரப்பு எற்படுத்தி உள்ளது. 

பாலியல்

மாணவியின் புகாரில், "நாங்கள் தனியாக இருந்ததை வீடியோ எடுத்து டீன், பேராசிரியரிடம் காண்பித்து டிசியை தந்து கல்லூரியை விட்டு நீக்க வைப்பேன் என மிரட்டினான். எனது செல்போனில் இருந்த எனது தந்தையின் எண்ணை எடுத்துக் கொண்டு அவருக்கு இந்த வீடியோ அனுப்புவேன் என மிரட்டினான்.

நாங்கள் இருவரும் எவ்வளவோ கெஞ்சியும் எங்களை விடுவதாக இல்லை. தொடர்ந்து மிரட்டி வந்தவன், அடிபணியவில்லை என்றால் வீடியோவை சமூக வலைதளங்களில் பதிவிட்டு விடுவேன் எனக்கூறி வலுக்கட்டாயமாக பாலியல் வன்கொடுமை செய்தான்" என்று கூறியதாக எப்.ஐ.ஆரில் தெரிவிக்கப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கைது செய்யப்பட்டுள்ள ஞானசேகரன் மீது கடந்த 2011ம் ஆண்டு இதே போன்று செயலில் ஈடுபட்டதாக ஒரு மாணவி புகாரளித்திருந்ததும், 15க்கும் மேற்பட்ட வழக்குகள் ஞானசேகரம் மீது நிலுவையில் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

From around the web