மலேசியாவின் அன்னை தெரேசா... மதர் மங்களம் காலமானார்... இன்று இறுதி அஞ்சலி!

 
மலேசியா அன்னை தெரசா

மலேசியாவின் அன்னை தெரேசா என்று அன்புடன் மக்களால் அழைக்கப்பட்டு வந்த அன்னை மங்களம்  காலமானதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவருக்கு வயது 97. வயது மூப்பு காரணமாக அன்னை மங்களம் உயிரிழந்தார். 1949ல் தொடங்கப்பட்ட ‘பியோர் லைஃப் சொசைட்டி’ சமூக சேவை அமைப்பின் வாழ்நாள் தலைவராக இருந்து வந்தவர் அன்னை மங்களம். இவர் பல மனிதாபிமான முயற்சிகளை மேற்கொண்டிருக்கிறார்.

மலேசியா அன்னை தெரசா

2010ல்   கல்வி மற்றும் சமூகத்திற்கான சேவைகளுக்காக மெர்டேக்கா விருதை வென்றவர் அன்னை தெரேசா மங்களம். மலேசியாவின் சமயங்களுகளுக்கு இடையிலான அமைப்பின் துணைத் தலைவராகவும் பதவி வகித்து வந்தவர். இவரது மறைவு குறித்து ப்யூர் லைஃப் சொசைட்டியின் துணைத் தலைவர் டத்தோ வி.எல்.கந்தன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்  மே 20ம் தேதி தனது 97வது பிறந்தநாளைக் கொண்டாடிய பிறகு மங்களத்திற்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது எனத் தெரிவித்துள்ளார்.

rip

இதனையடுத்து அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு நிமோனியா காய்ச்சல் பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.  வயது மூப்பு காரணமாக சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.  

ப்யூர் லைஃப் சொசைட்டியை அதன் 72 ஆண்டு காலமாக நடத்தி வந்தவர்.  இந்நிலையில், சிகிச்சைப் பலனளிக்காமல் நேற்று ஜூன் 10ம் தேதி  சனிக்கிழமை பிற்பகல் 3.52 மணிக்கு  காலமானார்,” என அறிவித்துள்ளார்.  அவரது இறுதி அஞ்சலி இன்று நடைப்பெறுகிறது. இவரது மறைவிற்கு பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

From around the web