அண்ணாமலை தோல்வி... பந்தயத்தில் தோற்று நடுரோட்டில் மொட்டையடித்துக் கொண்ட பாஜக நிர்வாகி!

 
அண்ணாமலை தோல்வி... பந்தயத்தில் தோற்று நடுரோட்டில் மொட்டையடித்துக் கொண்ட பாஜக நிர்வாகி!

நாடு முழுவதும் தேர்தல் திருவிழா நடந்து முடிந்துள்ள நிலையில், கோவை மக்களவைத் தொகுதியில் தமிழக  பாஜக தலைவர் அண்ணாமலை நிச்சயம் வெற்றி பெறுவார் என்று பந்தயம் கட்டிய பாஜக நிர்வாகி, கோவையில் அண்ணாமலை தோல்வியடைந்ததால், தான் பந்தயம் போட்டது போலவே நடுரோட்டில் மொட்டையடித்துக் கொண்டார். 

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர்,  முந்திரித் தோட்டத்தைச் சேர்ந்தவர் ஜெயசங்கர். இவர் திருச்செந்தூர் பகுதியில் உடன்குடி ஒன்றியத்தின் பாஜக மத்திய அரசின் நலத்திட்ட பிரிவு பொதுச் செயலாளராக பதவி வகித்து வருகிறார். இந்நிலையில், மாற்றுக் கட்சிகளைச் சேர்ந்த இவரது நண்பர்களிடம், கோவையில் போட்டியிடும் தமிழக பாஜக தலைவர்  அண்ணாமலை நிச்சயம்  வெற்றி பெறுவார் என்றும், அப்படி அண்ணாமலை வெற்றிய்டையவில்லை என்றால், பரமன்குறிச்சி பஜாரில்  நடுரோட்டில் தான் மொட்டையடித்துக் கொண்டு அங்கிருக்கும் ரவுண்டானாவைச்  சுற்றி வருவேன் என பந்தயம் கட்டியுள்ளார். 

இந்நிலையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை  கோவையில் தோல்வியடைந்ததால்  பாஜக பிரமுகர் ஜெய்சங்கர்  நேற்று தான் கூறியது போலவே மொட்டையடித்து கொண்டு ரவுண்டானாவை சுற்றி  வந்தார்.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web